‘ஹேமா கண்ணம்மா பெத்த குழந்தை தான்’ – உண்மையை போட்டு உடைத்த சௌந்தர்யா! அதிர்ந்து போன பாரதி!!

0

பாரதி கண்ணம்மா கண்ணம்மா சீரியலில் ஹேமா ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடி வருகிறார். இந்நிலையில் ஹேமா கண்ணம்மா பெற்ற குழந்தை தான் ஹேமா என்று கத்துகிறார். இதனால் அனைவரும் ஷாக்காகின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத விதமான பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஹேமாவிற்கு ஏர்போர்ட் செல்லும் வழியில் திடீரென பிக்ஸ் வருகிறது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிறது. மருத்துவமனையில் ஹேமாவை அனுமதிக்க எந்த முன்னேற்றமும் இல்லாமல் மோசமான நிலைமைக்கு சென்று கொண்டுள்ளார்.

இந்நிலையில் பாரதி ஹேமாவை நினைத்து கதறி அழுக சௌந்தர்யா அவரை கேவலமாக திட்டுகிறார். இப்போ உனக்கு சந்தோசமா?? உன் பிடிவாததால ஹேமா உயிர் இந்த நிலைமைக்கு வந்துடுச்சு. ஹேமாவுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுன்னா உன்ன சும்மாவே விட மாட்டேன் என்று சொல்கிறார். அப்பொழுது நர்ஸ் கதவை திறக்க பாரதி கையில் அடிபடுகிறது.

அம்மா என்று பாரதி கத்துகிறார். அப்பொழுது சௌந்தர்யா பாரதியிடம் இத்தனை வயசாகியும் ஒரு சின்ன அடிபட்டத்துக்கு அம்மானு கத்துற, அதே தானே ஹேமாவுக்கு இருக்கும். அதனால தான் அவ அம்மாவை தேடுற என்று சொல்கிறார். அதற்கு பாரதி நான் அம்மானு தான் கத்தினேன். ஆனால் ஹேமா அவளுக்கு சம்மந்தமே இல்லாத சமையல் அம்மா மேல ஏன் இவளோ பாசம் வச்சு இருக்கா? என்று சொல்கிறார். மேலும் ஹேமா என்ன அவ பெத்த குழந்தையா?? அவளுக்கு இவளுக்கும் என்ன சம்மந்தம் என்று கத்துகிறார்.

இதனால் கோவமடையும் சௌந்தர்யா ஹேமா கண்ணம்மா பெத்த குழந்தை தான் என்று கோவத்தில் உண்மையை போட்டு உடைக்கிறார். பாரதி அப்படி எல்லாம் இல்லை என்று கதறுகிறார். கடைசியில் நீயே ஹேமாவுக்கு அப்பா கிடையாது. ஆனால் நீ காட்டிய பாசத்தால் தான் அவ உன்ன அப்பான்னு கூப்டுறா. அதே மாதிரி கண்ணம்மாவும் அவ மேல பாசத்தை காட்டிட்டா அதனால அம்மானு கூப்டுற என்று சொல்லி சமாளிக்கிறார்.

கண்ணம்மா வீட்டில் லட்சுமி ஹேமா அமெரிக்கா சென்று விட்டால் என நினைத்து அழுகிறார். துளசியும் கண்ணம்மாவும் அவரை சமாதானம் செய்கின்றனர். அடுத்ததாக ஹாஸ்பிடலில் ஹேமாவின் உயிருக்கு மிகவும் ஆபத்து என்று டாக்டர் சொல்ல அனைவரும் உடைந்து போகின்றனர். ஒரே வழி தான் இருக்கு சமையல் அம்மா இங்க வந்தா ஹேமாவை காப்பாத்த சான்ஸ் இருக்கு என்று சொல்கிறார். சௌந்தர்யா நான் போய் கூப்பிட மாட்டேன் என்று சொல்ல வேறு வழியில்லாமல் பாரதி கிளம்புகிறார். அப்பொழுது வெண்பாவும் அவருடன் கிளம்ப சௌந்தர்யா அவரை மிரட்டி உட்கார வைக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here