மீண்டும் கண்ணம்மாவை நினைத்து காய்ச்சலில் கதறும் ஹேமா – மனம் மாறுவாரா பாரதி!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு அமெரிக்கா செல்ல முற்பட அதனை எப்படி தடுப்பது என்று பல திட்டங்களை போட்டு கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா அமெரிக்கா செல்வதால் லட்சுமி கடைசியாக ஹேமாவை பார்க்க வேண்டும் என்று வீட்டிற்கு வருகிறார். கண்ணம்மா தான் செய்த ஸ்வீட்டையும் கொடுத்து விடுகிறார். வீட்டில் இருந்து கிளம்பும் லட்சுமியை தான் சென்று விடுவதாக சொல்கிறார். இதனால் குடும்பமே ஷாக்காகிறது. பாரதியை என்ன சொல்லி தடுப்பது என்றும் தெரியாமல் உள்ளனர்.

பாரதிக்கு உண்மை தெரிந்தால் எப்படியும் பெரிய பிரச்சனை விடும் என்று தவிக்கிறார். ஆனால் லட்சுமி எப்படியும் சமாளித்து விடுவார் என்று சௌந்தர்யா தைரியமாக இருக்கிறார். ஆனாலும் வேணுவிற்கு பயமாக உள்ளது. சௌந்தர்யா கண்ணம்மா, துளசிக்கு கால் செய்ய யாரும் எடுக்காததை நினைத்து கவலையடைகிறார்.

லட்சுமி வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க தன் அம்மா சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. எப்படி தன் அம்மாவை பற்றி சொல்வது என்று யோசிக்கிறார். அந்த சமயம் பார்த்து கார் நின்று விடுகிறது. இது தான் சமயம் என்று லட்சுமி தானே சென்று விடுவதாக சொல்கிறார். ஆனால் பாரதி லக்ஷ்மியை விடுவதாக இல்லை. அந்த சமயம் பார்த்து அந்த ஆட்டோக்காரர் வர லட்சுமி அவருடன் சென்று விடுகிறார்.

அப்பொழுது பார்த்து கண்ணம்மா பார்த்து அந்த பக்கம் வருகிறார். கண்ணம்மாவை அழைத்து பேசுகிறார். இத்தனை நாட்கள் என்னையும், ஹேமாவும் பிரிக்க நீயும் என் அம்மாவும் எவ்வளவோ பிளான் போட்டிங்க. ஆனால் அது நடக்கல. இப்போ நானும் ஹேமாவும் அமெரிக்காவிற்கு போறோம்.

பிளைட்ல மட்டும் இல்லங்க இனி பஸ்ல கூட பறந்து போலாம்… அறிமுகமானது கேபிள் பேருந்து சேவை!!

இந்தியாவுக்கு 1947 இல் சுதந்திரம் கெடச்சது ஆனால் எங்களுக்கு நாளைக்கு காலைல 9 மணிக்கு தான் சுதந்திரம். இனிமேல் யார் நெனச்சாலும் என்னையும் ஹேமாவையும் பிரிக்க முடியாது என்று சொல்கிறார். கண்ணம்மா கோவத்தில் கொந்தளிக்க நீ எங்க போன எனக்கென்ன?? இதெல்லாம் எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற என்று கேட்க காண்டாகி அங்கிருந்து சென்று விடுகிறார்.

அடுத்ததாக வீட்டிற்க்கு செல்ல லட்சுமி அங்கு நடந்தவற்றை சொல்கிறார். அதாவது ஹேமா சமையல் அம்மா என்று சொன்னாலே ஏன் பாரதி கோவமடைகிறார் என்று கேட்கிறார். கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அடுத்ததாக பாரதி வீட்டிற்க்கு செல்ல ஹேமாவிற்கு மீண்டும் முடியாமல் வந்து விடுகிறது. சமையல் அம்மா என்று மீண்டும் புலம்பி கொண்டே உள்ளார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here