விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. கண்ணம்மாவின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் பணத்திற்காக தேடி அலைந்து கடைசியாக அவரின் சேமிப்பு பணமே அவசூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!ருக்கு உதவியாக இருந்தது. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவையும் வருணையும் ஒன்றாக பார்த்த பாரதி கோவமடைகிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்ணம்மா குழந்தையின் ஆபரேஷனுக்காக பணத்தை தேடி அலைகிறார். அந்த சமயத்தில் ஷண்முகம் கால் செய்ய கண்ணம்மா நடந்தவற்றை கூறியதும் கண்ணம்மாவின் சேமிப்பு பணத்தை தருகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஹாஸ்பிடலில் பணத்தை கட்டிவிட்டு வந்த கண்ணம்மா அங்கு வருணை பார்க்க அதிர்ச்சியடைகிறார். வருண் கண்ணம்மாவிடம் மன்னிப்பும் கேட்டார். அப்பொழுது குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய பாரதி அங்கு வர கண்ணம்மா பாரதியிடம் கதறி அழுகிறார்.
இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியின் காலில் விழுந்து எதையும் மனசில் வைத்துக்கொண்டு என் குழந்தையை பலி வாங்காதீங்க என்று அழுகிறார். பாரதி நான் என் தொழிலுக்கு எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளே செல்கிறார்.
ஆபரேஷன் நல்லபடியாக முடிய பாரதி வெளியே வருகிறார். கண்ணம்மா அவரிடம் நன்றி கூறுகிறார். உங்களை எப்போதுமே நான் மறக்க மாட்டேன் என்று கூற பாரதி கண்ணம்மாவிடம் நான் உன்கூட கடைசி வரைக்கும் எப்படியெல்லாம் வாழலாம்னு நெனச்சேன் தெரியுமா?? இப்படி பண்ணிட்டியே என்று கோவப்படுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த சமயம் பார்த்து வருண் அங்கு வர பாரதி கோவத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் பாரதி அவரின் சட்டையை பிடித்து சண்டையிடுகிறார். அப்பொழுது பார்த்து ஒரு நர்ஸ் வருணை கண்ணம்மாவின் புருசன் என்று சொல்ல கேவலமாக முறைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார் பாரதி.
அடுத்ததாக வெண்பா வீட்டிற்கு செல்கிறார். வெண்பா என்ன விஷயம் என்று தெரியாமல் அமர்ந்திருக்க பாரதி பட்டென்று என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?? என்று கேட்கிறார். வெண்பாவிற்கு ஒரே குஷியாகிறது. மேலும் பாரதி எனக்காக எவ்வளவு பண்ற உனக்கு நான் என்ன பண்ண போறேன்னு தெரியலை என்று கூறி வருத்தப்படுகிறார்.
சௌந்தர்யா ஹைதராபாத் சென்ற நேரத்தில் நாம் திருமணம் செய்துகொள்வோம். நாள் போகப்போக நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று பாரதி கூறுகிறார். இதையெல்லாம் சொல்லிவிட்டு பாரதி கிளம்ப போக வெண்பா அவரை கட்டிப்பிடிக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார் பாரதி. அடுத்ததாக சௌந்தர்யா ஹைதெராபாத் கிளம்ப தயாராகிக் கொண்டுள்ளார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.