கண்ணம்மா பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ளும் பாரதி?? – பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாளைய சிறப்பு எபிசோடில் பல எதிர்பாராத பல திருப்பங்களை காட்ட உள்ளனர். அதாவது இதனை வருடங்களில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என மக்களும் காத்துக்கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நாளைக்கு சிறப்பு தொடராக 3 மணி நேரமாக காட்டப்பட உள்ளது. மேலும் நேற்றைய எபிசோடில் 8 வருடங்களுக்கு பிறகு என காட்டப்பட்டதில் வெண்பா தாலியுடன் இருந்தது பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது.

அதன் பிறகு அது கனவு என்று தெரிந்ததும் தான் ரசிகர்கள் ஆறுதலடைந்தார்கள். இந்நிலையில் வெண்பா வேறு கண்ணம்மாவிற்கு போட்ட விஷ ஊசியால் அவர் செத்திருப்பார் என்று கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது. இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு என்றால் குழந்தைகளுக்கும் 8 வயது ஆகி இருக்கும்.

அப்பொழுது கண்ணம்மா பற்றிய உண்மை பாரதிக்கு தெரிந்திருக்குமா?? இந்த 8 வருடத்தில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்பதே கதையில் ட்விஸ்ட்டாக உள்ளது. இந்நிலையில் கண்ணம்மா பாரதிக்கு திருமணம் நடந்து விட்டது என்று எண்ணி அப்பொழுதே ஊரை விட்டு கிளம்பியுள்ளார்.

ஒரு கிராமத்தில் குடியிருந்து அங்கிருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். அவரது குழந்தையும் 8 வயது குழந்தையாக உள்ளது. இந்நிலையில் வெண்பா சொல்வது போல கண்ணம்மாவிற்கு இன்னும் அந்த மயக்கம் வந்துக்கொண்டு தான் உள்ளது. மேலும் கண்ணம்மா கஷ்டப்படும் நிலையில் தான் இருக்கிறார்.

கண்ணம்மா மேல் அந்த குழந்தை மிகவும் பாசமாக உள்ளது. அடுத்ததாக பாரதியை காட்ட பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மைகள் தெரிந்ததா?? இல்லையா?? என்பதை காட்டவில்லை. இந்நிலையில் இத்தனை வருடங்களில் கண்ணம்மா பற்றிய உண்மை தெரியாமலா இருக்கும். இந்த 3 மணி நேர எபிசோடை முழுமையாக பார்த்தால் மட்டுமே என்ன நடக்க போகிறது என்று தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here