விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்?? வெண்பாவின் சாயம் வெளுக்குமா?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாக உள்ளது. ஆசிரமத்தை விட்டு வெளியேறும் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
பாரதி கண்ணம்மா
முந்தைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு மறைமுகமாக சௌந்தர்யா செய்து வரும் உதவியை வெண்பா கண்டுபிடித்து பாரதியிடம் கூறி அவரை கோபமடைய செய்கிறார். இதனால் பாரதி நேராக கண்ணம்மா இருக்கும் இடத்திற்கு தேடி சென்று கண்டபடி பேசுகிறார். மேலும் ‘சோத்துக்கு வழி இல்லன்னா என் காலுல விழுந்து கெஞ்சு’ என்று கூறி இழிவாக பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா பணத்தை பாரதியின் முகத்தின் மீது விட்டெறிந்தார். இன்றைய எபிசோடில் கண்ணம்மா அந்த ஆசிரமத்தை விட்டும் வெளியேறுகிறார். அங்கிருப்பவர்கள் எவ்வளவு கூறியும் கண்ணம்மா யார் பேச்சையும் கேட்காமல் அங்கிருந்து வெளியேறுகிறார். வெளியில் வரும் கண்ணம்மாவிற்கு அங்கிருக்கும் ஆபத்து தெரியாமல் ரோட்டில் நடந்து செல்கிறார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அடுத்ததாக பாரதியின் வீட்டில் கண்ணம்மாவிற்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவளை நினைத்து பதட்டமடைகின்றனர். வீட்டிற்கு வரும் பாரதி அங்கு நடந்தவற்றை கூற அனைவரும் பாரதியை திட்டி தீர்க்கின்றனர். இதனை பாரதியும் கண்டு கொள்வதாக இல்லை. அடுத்ததாக கண்ணம்மாவை சௌந்தர்யா தேடி அலைகிறார். மற்றொரு பக்கம் வெண்பா கண்ணம்மாவை கொல்வதற்காக தேடி அலைகிறார். இந்த சமயத்தில் வெண்பாவின் அடியாள் ஒருவன் கண்ணம்மாவை கண்டுபிடிக்கவே அவரை ஆட்டோவில் கடத்தி செல்கிறார்.
கண்ணம்மா எவ்வளவு கத்தியும் அவளை விடவில்லை. கடத்திச் செல்லும் வழியில் போலீசார் இருந்ததால் தப்பித்த கண்ணம்மா அதன் பிறகு அங்கிருந்து செல்கிறார். செல்லும் வழியில் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. வலியில் துடிக்கும் கண்ணம்மா மயங்கி விழுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது. மேலும் இந்த சீரியல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.
கண்ணம்மாவை சௌந்தர்யா கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்க்கிறார். ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் வெண்பா தான் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்க்க போவதாக கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கண்ணம்மாவிற்கு பிரசவம் நல்ல படியாக நடக்குமா?? வெண்பாவின் சதி வெட்ட வெளிச்சம் ஆகுமா?? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.