‘ஹேமாவை எப்படியாவது கண்ணம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ – துளசியிடம் கதறும் சௌந்தர்யா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா சென்னைக்கு வந்ததை அடுத்து அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மேலும் இன்றைய எபிசோடில் துளசியை சௌந்தர்யா பார்த்து விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் சதி திட்டத்தின் படி சௌந்தர்யாவிடம் ஒரு பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடந்து விட்டதா?? என கேட்க சௌந்தர்யாவும் அதற்கு பதிலடி கொடுத்தார். மேலும் வேணு வேறு பாரதிக்கு வேறு கல்யாணம் செய்துவைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது சௌந்தர்யாவை அதிர்ச்சியாக்கியது.

இன்றைய எபிசோடில் துளசியும், கண்ணம்மாவும் பேசிக்கொண்டிருக்க அங்கு வரும் லட்சுமி கண்டிப்பாக இன்றைக்கு ஹாஸ்பிடல் போயே தீர வேண்டும் என்று ஆடம் பிடிக்கிறார். கண்ணம்மாவும் ஒத்துக்கொள்ள துளசியிடம் அது பாரதி என்று சொல்ல துளசியும் ஷாக் ஆகிறார். மேலும் கண்ணம்மாவும் எப்படி பாரதியை சந்திப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக துளசி லக்ஷ்மிக்கு பேக் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறார். வரும் வழியில் சௌந்தர்யா பார்த்து விட துளசியிடம் வந்து பேசுகிறார். துளசிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சௌந்தர்யா கண்ணம்மாவை பற்றி புலம்ப உண்மையை சொல்லலாமா?? வேண்டாமா?? என்று யோசிக்கிறார்.

எப்படியும் கண்ணம்மாவை பார்த்து ஹேமாவை ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறார். துளசி ஹேமாவை பற்றி விசாரிக்க அப்படியே கண்ணம்மாவை போலவே இருப்பதாக சொல்கிறார். பிறகு அங்கிருந்து சென்று விட துளசியும் வீட்டிற்கு செல்கிறார். அங்கு லட்சுமி தனது அம்மாவிற்காக வாசலிலேயே காத்துக்கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

துளசி உள்ளே வந்து படு என்று சொல்லியும் கேட்கவும் இல்லை. அடுத்து கண்ணம்மாவும் வந்து விட என்ன எவ்வளவு நேரம் என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மாவும் பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் சென்றதாக சொல்ல நாளைக்கு கண்டிப்பாக பாரதி டாக்டரை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்கிறார். அடுத்து வெண்பாவை காட்டுகின்றனர்.

வெண்பா என்ன 8 வருடங்களுக்கு முன்னாள் நடந்த நிகழ்வினை யோசிக்கிறார். சௌந்தர்யா மட்டும் 10 நிமிடங்களுக்கு பிறகு வந்திருந்தால் இப்பொழுது நான் பாரதி பொண்டாட்டியாக இருந்திருப்பேன் என்று கோவமடைகிறார். எப்படியாவது பாரதியை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here