கண்ணம்மா இருக்கும் இடத்தை சொல்லாமல் மறைக்கும் சீதா – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கிராமத்தில் எடுத்த போட்டோவில் இருப்பதை கண்டுபிடித்த அகிலன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல சௌந்தர்யா அந்த கிராமத்திற்கு செல்கிறார். இதனை பார்த்த அஞ்சலிக்கு கடுப்பாகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. கண்ணம்மா தனது டிரீட்மென்ட்டுக்காக லட்சுமியின் வற்புறுத்தலுக்கு இணங்க சென்னை வருகிறார். இந்த விஷயம் சௌந்தர்யாவிற்கு இன்னும் தெரியாது. மேலும் நேற்று அஞ்சலியும் அகிலனும் கிராமத்தில் எடுத்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்க கண்ணம்மாவை பார்த்து விடுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அகிலன் சௌந்தர்யாவிடம் சொல்ல அவர் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனடியாக கண்ணம்மாவை தேடி கிளம்புகிறார். இது அஞ்சலிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்றைய எபிசோடில் அஞ்சலி கோவமாக அமர்ந்திருக்க நிம்மி என்ன விஷயம் என்று கேட்கிறார். கண்ணம்மாவை கண்டுபிடித்த விஷயத்தை சொல்ல நிம்மிக்கும் ஷாக் ஆகிறது.

இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். இதனை பாரதியிடம் சொல்லி விடுவோமா என்று யோசிக்கின்றனர். அடுத்ததாக சௌந்தர்யா அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு கண்ணம்மா பற்றி விசாரிக்க லட்சுமி ஓட அம்மாவா?? என்று கேட்டு வழி சொல்கின்றனர்.

#IndvsAus சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

சௌந்தர்யா வீட்டை கண்டுபிடித்து செல்ல அங்கு வீடு பூட்டியுள்ளது. அனைவரிடமும் விசாரிக்க அவர்கள் ஊரைவிட்டு சென்றதாக சொல்கின்றனர். அங்கு சீதா வருகிறார். சௌந்தர்யா அவள் எங்கே என்று விசாரிக்க அவளை எதுக்கு நீங்க தேடுறீங்க என்று கேட்கிறார். அவளை நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன் எங்க போயிட்டா என்று சொல்ல சீதா கோவப்பட்டு எதுக்கு நீங்க அவளை தேடணும் என்று பேசி விடுகிறார்.

கடைசியாக சௌந்தர்யா நான் அவளின் மாமியார் என்று சொன்னதும் சீதா அதிர்ச்சியாகிறார். சௌந்தர்யா அவர்கள் எங்கே என்று கெஞ்ச சீதாவிற்கு கண்ணம்மா தன்னை யாராவது தேடி வந்தால் எதுவும் சொல்ல கூடாது என்று சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. சீதா சௌந்தர்யாவிடம் உண்மையை மறைகிறார்.

சௌந்தர்யா எவ்வளவு கெஞ்சியும் சீதா தெரியாது என்றே மறுத்து விட்டார். அடுத்ததாக அகிலனை காட்ட கண்ணம்மா வர போகிறார் என்ற சந்தோஷத்தில் உள்ளார். அஞ்சலிக்கு இது கடுப்பாகிறது. ஜூஸ் க்ளாஸை வேண்டும் என்றே உடைக்க அகிலன் பதறி என்ன ஆச்சு என்று கேட்கிறார். அஞ்சலி அகிலனை திசை மாற்ற தன் நண்பன் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளதாகவும் நியூ மாடல் கேமரா வைத்திருப்பதாகவும் அதனை சென்று வாங்கலாம் என்று சொல்ல 2 நாள் ஆகட்டும் என்று அகிலன் மறுத்து விடுகிறார்.

இதனால் கோவமடையும் அஞ்சலி இந்த கண்ணம்மாவுக்காக ஏன் இப்படி உருகுற அவ ஓடிப்போனவள் தானே என்று சொல்ல அதற்கு அகிலன் கண்ணம்மா அண்ணி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி என்று சொல்கிறார். அஞ்சலியும் கோவப்பட்டு செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here