கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து செல்லும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமா மீது வைத்திருக்கும் அன்பினை பார்த்து அது இது ரத்த பாசமா?? வளர்த்தபாசமா?? என்று சந்தேகம் எழுகிறது. டெஸ்ட் எடுத்து பார்த்தே ஆக வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா, பாரதி மற்றும் ஹேமா மூவரும் ரெஸ்டாரண்ட்டுக்கு செல்ல ஹேமா தெரியாமல் ஜூஸை வெண்பா மீது கொட்டி விடுகிறார். இதனால் கோவமடையும் வெண்பா திட்டி விட்டுகிறார். அடிக்க செல்கிறார். இதனால் பாரதிக்கும் வெண்பாவிற்கும் சண்டை வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கடுத்து வெண்பா லேப்டாப்பில் 8 வருடத்திற்கு முன்பு கல்யாணம் செய்ய போகும்போது எடுத்த புகைப்படங்களை பார்த்ததும் ஷாக் ஆகிறார். அங்கிருந்து கோவமாக வந்து விடுகிறார். இன்றைய எபிசோடில் அகிலனும் அஞ்சலியும் கிராமத்தில் திருவிழாவில் எடுத்த புகைப்படங்களை லேப்டாப்பில் பார்த்துக்கொண்டுள்ளார்.

சௌந்தர்யா வழக்கம் போல கண்ணம்மாவை பற்றி புலம்பிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது அகிலன் பார்க்க பின்னால் கண்ணம்மா இருப்பதை பார்த்து விடுகிறார். அகிலன் கத்த சௌந்தர்யா என்ன என்று கேட்க அகிலன் போட்டோவை காட்டுகிறார். இதனால் சந்தோஷமடையும் சௌந்தர்யா அன்று துணிக்கடையில் இருந்தது கண்ணம்மா தான் என்று கண்டுபிடிக்கிறார்.

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு – பீதியடையும் மக்கள்!!

கண்ணம்மாவை அழைத்து வர தான் மட்டும் அந்த கிராமத்திற்கு செல்வதாக கிளம்புகிறார். அப்பொழுது ஹேமா அங்கே வர யாரை பார்க்க இவளோ சந்தோசமாக கிளம்புறீங்க என்று கேட்க சௌந்தர்யாவும் எப்பிடியோ சமாளிக்கிறார். அஞ்சலிக்கு கண்ணம்மா திரும்ப வந்து விடுவாளோ என்ற பயம் வேறு. அடுத்ததாக சௌந்தர்யா கிளம்பி கிராமத்திற்கு செல்ல அப்பொழுது பாரதி வந்து விடுகிறார்.

எங்க இவளோ சந்தோசமா போறீங்க என்று கேட்க சௌந்தர்யாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஹேமா எல்லாத்தையும் கால் பண்ணி சொல்லிட்டா என்று சொல்ல சௌந்தர்யாவிற்கு அதிர்ச்சியாகிறது. நீங்க ஹேமா பத்தின ஏதோ விஷயமா தான் போறிங்கனு எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

சௌந்தர்யாவிற்கு அப்பொழுது தான் பாரதிக்கு முழுசா எந்த விஷயமும் தெரியவில்லை என்று தெரிகிறது. அதன் பிறகு வெண்பா வைத்திருக்கும் போட்டோவை எப்படி அளிப்பது என்று சௌந்தர்யாவிடம் கேட்க அவளிடம் பேச்சை குறைத்துக்கொள் என்று சொல்கிறார். இந்த வேலையை முடுச்சுட்டு நானே வந்து வெண்பா கிட்ட பேசுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here