கண்ணம்மாவால் சண்டை போட்டு கொள்ளும் பாரதி மற்றும் சௌந்தர்யா – பலவித பாச போராட்டங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி மற்றும் சௌந்தர்யா இருவரும் ஹேமாவிற்காக சமையல் அம்மா சாப்பாடு கொடுப்பதில் சண்டை போட்டு கொள்கின்றனர். கண்ணம்மாவை நினைத்து சௌந்தர்யாவிற்கு கண் கலங்குகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி தனது அப்பாவை அதிகமாக வெறுப்பதாய் கூறுகிறார். அதே போல் மிகவும் கோபத்துடனும் பேசுகிறார். பின், கண்ணம்மா அழுவதை பார்த்து லட்சுமிக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. இதனை அடுத்து லட்சுமி கண்ணம்மாவை சமாதானம் செய்கிறார். பின், பாரதி வீட்டில் ஹேமாவிற்கு என்று ஸ்பெஷலாக வெண்ணை வாங்கி கொண்டு வருகிறார்.

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு – அரசியல் தலைவர்கள், திரை உலகினர் இரங்கல்!!

பின், சௌந்தர்யா மற்றும் பாரதி இருவரும் சமையல் அம்மா ஹேமாவிற்காக சமைப்பது குறித்து சண்டை போடுகின்றனர். இதனால் இருவருக்கும் சண்டை வலுக்கிறது. பாரதி இந்த விஷயத்தில் தன்னால் விட்டு கொடுக்கவே முடியாது என்று கூறுகிறார்.

பின், பாரதி ஒரு வழியாக தனது அம்மாவை சமாதானம் செய்து விடுகிறார். இப்படியாக இருக்க, சௌந்தர்யா லட்சுமியின் பெயர் சூட்டு விழாவின் போது எடுத்து கொண்டு வந்த கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரும் இருக்கும் பேனரை பார்த்து கண் கலங்குகிறார்.

இதனை பார்த்து விடும் பாரதிக்கு கோபம் உச்சிக்கு ஏறி விடுகிறது. சௌந்தர்யாவிடம் பயங்கரமாக சண்டை போடுகிறார். சௌந்தர்யாவும் கண்ணம்மாவிற்கு ஆதரவாக பேசி விடுவதால், பாரதி மனம் நொந்து போய் விடுகிறார். பாரதியை நினைத்து சௌந்தர்யா மிகவும் சோகம் அடைகிறார். பின், பாரதி வெண்பா வீட்டிற்கு சென்று விடுகிறார். அங்கு சென்று கண்ணம்மாவை பற்றி புலம்புகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது, வெண்பாவின் வேலைக்காரி வெண்பாவை பற்றி நினைக்க வேண்டும் என்றும் பாரதி இங்கு வருவதால் வெண்பாவை பற்றி அனைவரும் தப்பாக பேசுவதாகவும் கூறுகிறார். இதனால் பாரதிக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here