டிஎன்ஏ ரிப்போர்ட்டை கண்ணம்மாவிடம் கொடுக்கும் லட்சுமி – பரபரப்பான திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று தனது வீட்டிற்கு லட்சுமி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது என்று கூறுகிறார். பின், லட்சுமி தனது அப்பா குறித்து கண்ணம்மாவிடம் கேட்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று சௌந்தர்யா அகிலிடம் லட்சுமி வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக கூறுகிறார். ஒரு முறை கூட லட்சுமியை இந்த வீட்டிற்கு வர சொல்ல வேண்டும் என்று தனக்கு தோன்றியதில்லை என்றும் கூறுகிறார்.

இதனை அடுத்து கண்ணம்மாவிடம் லட்சுமி ஹேமா வீட்டிற்கு சென்றது குறித்து கூறுகிறார். அவர்களது வீடு மிகவும் பெரிதாக இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் மிகவும் நன்றாக தன்னிடம் நடந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

மல்லிகாவின் சர்ஜரிக்கு 5 லட்சம் செலவாகும் என்று கூறிவிடும் மருத்துவர் – நொந்து போன சக்தி! விறுவிறுப்பாகும் “மௌன ராகம்”!!

பின், தனது தந்தை குறித்தும் லட்சுமி கேள்வி கேட்கிறார். அதற்கு கண்ணம்மாவால் எந்த பதிலும் கூற முடியவில்லை என்றதும், லட்சுமி விட்டு விடுகிறார். அப்போது லட்சுமி தனது பேகில் இருக்கும் டிஎன்ஏ ரிப்போர்ட்டை கண்ணம்மாவிடம் கொடுக்கிறார். அதனை பிரிக்க போகும் போது பாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் உண்டானது. இதனை பிரித்து படிப்பது அநாகரீகமானது என்று எண்ணி வைத்து விடுகிறார்.

அந்த டிஎன்ஏ ரிப்போர்ட்டை நாளை ஹேமாவிடம் கொடுத்து விட வேண்டும் என்றும் கூறுகிறார். லட்சுமியும் சரி என்று கூறி விடுகிறார். பின், கண்ணம்மா காய்கறி வாங்குவதற்காக கடை தெருவிற்கு செல்கிறார். அப்போது அங்கு பாரதியும் வந்து விடுகிறார். அப்போது பாரதி கண்ணம்மாவை பார்க்க திரும்பும் போது வேறு ஒருவர் வந்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், வீட்டிற்கு செல்லும் கண்ணம்மா லட்சுமி சுவர் எல்லாம் அப்பாவை வெறுப்பதாக கிறுக்கி வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விடுகிறார். லட்சுமி தனது அப்பா குறித்து மிகவும் கொந்தளித்து பேசுகிறார். இதனால் கண்ணம்மா மிகவும் வருந்துகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here