சௌந்தர்யாவின் முன்னாள் காதலரான விக்ரம் புதிதாக சீரியலில் எண்ட்ரியாகியுள்ளார். அவரை பார்த்ததும் ஆரம்பத்தில் அனைவரும் திகைத்தனர். பின்னர் காதலித்த கதைகளை பேசி குடும்பமே குதூகலமாகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா தொடரில் விக்ரம் என்னும் புதிய நபர் எண்ட்ரியாகியுள்ளார். அதாவது சௌந்தர்யா, அவரது கணவர் மற்றும் விக்ரம் மூவரும் ஒரே வகுப்பில் தான் படித்திருக்கிறார்கள். அப்போது சௌந்தர்யாவை விக்ரம் காதலித்திருக்கிறார். இந்த கதைகள் அனைத்தையும் கூறி வீட்டில் சிரித்து பேசி கொண்டிருக்கின்றனர்.
அப்போது பாரதி செய்து வரும் சமூக தொண்டை பற்றி விக்ரமுக்கு கூறுகிறார்கள். அவரும் எனக்கும் சமூக தொண்டில் அதிக அக்கறை இருக்கிறது என கூறுகிறார். அறிமுகமான சில மணி நேரத்திலேயே வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டார். பாரதியையும் கண்ணம்மாவையும் விக்ரம் தான் சேர்த்து வைப்பார் போல தோன்றுகிறது அல்லது மேலும் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்