பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தமிழ்நாட்டு அளவில் கிடைத்த பெருமை – வேற லெவல் போங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மீண்டும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் 2 வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் வெற்றி இந்த அளவிற்கு இருக்கும் என்று யாரும் நினைத்தது கூட இல்லை. ஒரு பெண் அம்மா இல்லாமல் சித்தி கொடுமையில் எப்படி வாடுகிறாள் என்பதையும் கணவராக வந்து அவர் தரும் பாசமும், நேசமும் எப்படி தருகிறார் என்பதையேஆரம்பத்தில் கதையின் முக்கிய கருவாக இருந்தது.

மேலும் பல பிரச்சனைகளுக்கு பின் பாரதி கண்ணம்மா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்கை பல தம்பதிகளும் ஏங்கும் விதமாக இருந்தது. பாரதி கண்ணம்மா போல ஒரு ஜோடி உண்டா எண்ணும் அளவிற்கு இவர்களின் வாழ்க்கை இருந்தது.

இதில் இடையில் வந்தவர் தான் வெண்பா. அவர் கால் எடுத்து வைத்த நாளில் இருந்தே பாரதி கண்ணம்மாவிற்கு இடையே விரிசல் விழ ஆரம்பித்து விட்டது. வெண்பா பாரதி மனசை கலைக்க தற்போது இருவரும் பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இந்த சீரியல் டாப் ரேட்டிங். 8 வருடங்களுக்கு பிறகு குழந்தைகளும் வளர்ந்து விட்டார்கள்.

எப்பொழுது சேர போகிறார்கள் என்ற ஆர்வத்தில் ;மக்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் தற்போது தமி;நாட்டிலேயே டாப் சீரியலாக பாரதி கண்ணம்மா உருவெடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு அளவில் நம்பர் 1 சீரியல் பாரதி கண்ணம்மா தான் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here