விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. வெண்பா செய்யும் வில்லத்தனமான வேலைகளில் இருந்து சௌந்தர்யா கண்ணம்மாவை காப்பாற்றி வருகிறார். ஹேமா மீது அதிகப்படியான பாசத்தை வைத்து விட்டு பாரதி அவரை பிரிய முடியாமல் தவித்து வருகிறார்.
இனி வரும் எபிசோடுகளில் கண்ணம்மாவின் குழந்தை தான் ஹேமா மற்றும் லட்சுமி என்ற உண்மையை தெரிந்துகொள்வார் பாரதி. ஆனாலும் ஹேமாவையும் லட்சுமியையும் பிரிய முடியாமல் தவித்தும் வருகிறார். இந்த கதைக்களம் தான் தெலுங்கில் கார்த்திகை தீபமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் பாரதிக்கு கண்ணம்மா உத்தமி என்ற உண்மை கடைசி நேரத்தில் தெரிய வருகிறது. அதாவது பாரதி கண்ணம்மாவையும் வருணையும் சேர்த்து வைத்து தான் தவறாக பேசினார். ஆனால் வருணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மை தெரிந்ததும் நொறுங்கி போயி விடுகிறார்.
இப்பொழுது வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்த கொண்ட பாரதி கடும் கோவத்தில் இருக்க ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருக்கும் வெண்பா பாரதியை மாட்டிவிட தான் இறந்து போனதாக அனைவரையும் நம்ப வைக்கிறார். இதனால் பாரதி ஜெயிலுக்கு போவது போன்றும் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மா பாரதியை எப்படி காப்பாற்ற போகிறார் என்ற ட்விஸ்ட்டுடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்