தன் மகள் என்றே தெரியாமல் லட்சுமியுடன் கொஞ்சி விளையாடும் பாரதி – ஆனந்தத்தில் சௌந்தர்யா!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று லட்சுமி ஹேமாவின் வீட்டிற்கு போனதை அறிந்து கண்ணம்மா மிகவும் கோபம் அடைகிறார். பாரதியின் வீட்டில் சௌந்தர்யா தனது இரு பேத்திகளும் ஒன்றாக இருப்பதை பார்த்து மகிழ்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி ஹேமா வீட்டினை பார்த்து ஆச்சரியம் அடைகிறார். தனது வாழ்நாளில் இவ்வளவு பெரிய வீட்டினை பார்த்தது இல்லை என்றும் கூறுகிறார். அதன் பிறகு ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் படிக்க சென்று விட்டனர்.

‘ஷிவாவை வெளியே கொண்டு வரணும்னா தட்சாயினி காலில் விழுந்து மன்னிப்பு கேளு’ – சஹானாவிடம் கொந்தளிக்கும் பவானி!!

இப்படியாக இருக்க, கண்ணம்மா லட்சுமியை காணாமல் பரிதவித்து போய் விடுகிறார். அப்போது வீட்டிற்கு வரும் துளசி கண்ணம்மாவை சமாதானம் செய்கிறார். பின், ஆட்டோக்காரர் வந்து லட்சுமி ஹேமாவின் வீட்டிற்கு சென்று இருப்பதாக கூறுகிறார்.

இதனால் கண்ணம்மா மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். அம்மாவிடம் கூறி விட்டு தான் செல்ல வேண்டும் என்று கூடவா அவளுக்கு தெரியாது என்று கேட்கிறார்.

இப்படியாக இருக்க, பாரதியின் வீட்டில் சௌந்தர்யா, அகில் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். அப்போது பாரதியும் வந்து விடுகிறார்.

பாரதி லட்சுமியை முதலில் கவனிக்கவில்லை. ஹேமாவை கொஞ்சி கொண்டு இருக்கும் பாரதியை பார்த்து லட்சுமிக்கு ஏக்கமாக இருக்கிறது. லட்சுமி பாரதியின் முன் வந்து நின்றதும், பாரதி ஆச்சரியம் அடைத்து விடுகிறார். லட்சுமியை தூக்கி கொஞ்சுகிறார். தனது மகன் தனது இரு குழந்தைகளுடன் ஒன்றாக இருக்கும் காட்சியினை பார்த்து சௌந்தர்யாவிற்கு கண்கலங்கி விடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், பாரதி, ஹேமா மற்றும் லட்சுமி மூவரும் விளையாட சென்று விடுகின்றனர். பின், டிஎன்ஏ ரிப்போர்ட் ஹேமா மற்றும் லட்சுமியின் பாடபுத்தகங்களுடன் இருக்கின்றது. அதுவும் பாரதியின் கண் முன்னே இருக்கின்றது. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here