பாரதியும் கண்ணம்மாவும் ஒன்னு சேர்ந்துட்டாங்களா?? பல ட்விஸ்டுகளுடன் வெளியான ‘பாரதி கண்ணம்மா’!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி லட்சுமி தனது அப்பாவின் பெயர் சொன்னதும் பாரதி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். அதே போல் அகில் மற்றும் அஞ்சலி இருவரும் ஒன்றாக அன்பாக இருப்பதை பார்த்து சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி தான் தனது அப்பாவின் பெயர் என்று லட்சுமி கூறியதும் வெண்பா மற்றும் பாரதி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பின், வெண்பா ஒருவாறாக சமாளித்து பலர் பெயர் பாரதி என்று இருக்கும் என்று கூறி சமாதானம் செய்கிறார். பின், ஒருவாறாக பள்ளியில் அட்மிஷன் போட்டு விடுகின்றார்.

சிம்பு அந்த குழந்தைக்கு பண்ண காரியத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

இப்படியாக இருக்கும் போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக லட்சுமிக்கு ஃபீஸ் கட்டுகின்றனர். பின்னே, “உன்னாலே, உன்னாலே” பாடல் வேறு ஓடுகிறது. இருவரும் அடுத்து ஒரு ஆண் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

கடைசியாக, அது வெண்பாவிற்கு ஏற்பட்ட கனவு ஆகும். இதனால் அதிர்ச்சி அடையும் வெண்பா பாரதியை விடவே கூடாது என்று முடிவு எடுக்கிறார். இதனை அடுத்து அகில் மற்றும் அஞ்சலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

இதனை அடுத்து லட்சுமி மற்றும் ஹேமா இருவரையும் பார்க்க பள்ளிக்கு வருகிறார். ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை பார்த்து சௌந்தர்யாவிற்கு கண்ணீரே வந்து விடுகிறது. இருவருக்கும் அவரே ஊட்டி விடுகிறார். பின், வெண்பா வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னை கண்ணம்மா அறைந்து விட்டதாக கூறுகிறார். இதனால் கோபம் அடையும் வெண்பா கண்ணம்மாவை எதாவது செய்ய வேண்டும் என்று சூளுரைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here