‘கண்ணம்மா மேல இருக்க பழியை தொடச்சிட்டு வெண்பா கல்யாணத்தை பத்தி பேசலாம்’ – மாஸ் என்ட்ரி கொடுத்த சௌந்தர்யா!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ராஜா ராணியும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சரவணனுக்கு சந்தியாவை பிரிந்து இருக்கவும் முடியவில்லை. மனதும் ஒரு கட்டுக்குள் வைக்கவும் முடியவில்லை. கண்ணை மூடினாலே இத்தனை நாட்கள் சந்தியா உடன் இருந்த நாட்கள் தான் நியாபகத்திற்கு வருகிறது.

மேலும் வெண்பா வேறு அஞ்சலியின் கருவை கலைக்க பல வேலைகளை செய்து வருகிறார். இதனை அகிலன் கண்டுபிடித்ததும் விடுகிறார். ஆனால் கடைசி நேரத்தில் அஞ்சலி தப்பித்தும் விடுகிறார். இதனால் கடுப்பாகும் வெண்பா வேறு வழியில் யோசிக்கிறார்.

அதாவது இதற்கு மேலும் நம்மால் காத்திருக்க முடியாது என்று வேணுவிடம் பேச செல்கிறார். எத்தனை நாள் தான் பாரதி இப்படி தனியாக வாழ முடியும் என்று வேணுவிடம் சொல்கிறார். இதனை தூரத்தில் இருந்து அகிலன் கேட்டு விடுகிறார். அது எங்களோட பிரச்சனை நீ எதற்கு தலையிடுற, பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் இதை முடிவு பண்ணிக்கலாம் என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்லி விடுகிறார்.

அந்த நேரத்தில் தான் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் சௌந்தர்யா. கண்ணம்மா இருக்க வேண்டிய இடத்துல யாரையும் வச்சு எங்களால பார்க்க முடியாது உன் வேலையை பார்த்துட்டு போ என்று சொல்லிவிடுகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here