8 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக சந்திக்கும் பாரதி கண்ணம்மா – அசத்தலாக வெளியான சிறப்பு ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு பிறகு அப்படி என்ன தான் நடந்தது என பலரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டும்போது சரியான நேரத்தில் வந்து சௌந்தர்யா தடுத்து விடுகிறார். மேலும் பாரதியையும் கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்கிறார். கோவிலில் வெண்பா கதறி அழுகிறார். அடுத்ததாக 8 நேராக 8 வருடத்திற்கு பிறகு காட்டுகின்றனர்.

கண்ணம்மாவின் குழந்தை நன்கு வளர்ந்து விடுகிறது. சௌந்தர்யாவை போலவே கண்ணம்மாவிடம் பாசமாகவும் உள்ளது. இந்நிலையில் கண்ணம்மா பற்றிய உண்மை பாரதிக்கு தெரிய வந்ததா?? என்பதை காட்டவில்லை. மேலும் மக்களும் என்ன நடந்திருக்கும் என ஆர்வம் கட்டி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது விஜய் டிவி பாரதி கண்ணம்மா ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கண்ணம்மா தையல் தொழில் செய்து வாழ்வது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் கண்ணம்மாவின் குழந்தை தன் அப்பா எங்கே என்றும் கேட்கிறது. அடுத்ததாக பாரதியிடம் இருக்கும் குழந்தை ஆடி காரில் வசதியாக வந்துகொண்டுள்ளது.

பாரதியும் அவரது குடும்பத்துடன் கண்ணம்மா இருக்கும் கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு வருகின்றனர். ஒரு பக்கம் ஏழ்மை குடும்பத்தில் இருக்கும் கண்ணம்மாவின் மற்றொரு பக்கம் வசதியாக வாழும் பாரதியின் குழந்தை.

சௌந்தர்யா வழக்கம் போல பாரதியும் கண்ணம்மாவும் சீக்கிரமாக ஒன்று சேர வேண்டும் என்று வேண்டி கொள்கிறார். அடித்து கண்ணம்மாவும் அந்த கோவிலுக்கு வருகிறார். இரு குடும்பமும் பார்த்துக்கொள்வார்களா?? இந்த 3 மணிநேர சிறப்பு தொடரில் என்ன நடக்க போகிறது என்பது ட்விஸ்ட்டாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here