8 வருடங்களுக்கு பிறகு பாரதி வீட்டிற்கு வரும் லட்சுமி – சந்தோசத்தில் குதிக்கும் சௌந்தர்யா!!

0

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று லட்சுமி பாரதியின் வீட்டிற்கு வருவதாக ஹேமா கூறுகிறார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடையும் சௌந்தர்யா லட்சுமியை வரவேற்க வீட்டின் வாசலிலேயே காத்து இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி லட்சுமியின் அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக சொல்கிறார். அதே போல் லட்சுமியை பார்க்கும் போது எதோ இனம் புரியாத அன்பு வருவதாகவும் சொல்கிறார்.

பூவரசியை பழிவாங்க மறுபடியும் வீட்டிற்கு வரும் கதிர் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

இதனால் சௌந்தர்யா மற்றும் அகிலன் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின், பாரதியிடம் சௌந்தர்யா ஹேமாவிற்கு இனி சமையல் அம்மா தான் லஞ்ச் செய்து தர இருப்பதாக கூறுகிறார். இதனால் பாரதி மிகவும் கொந்தளித்து விடுகிறார். பின், அவரை சமாதானம் செய்யும் சௌந்தர்யா தான் அந்த முடிவினை கை விடுவதாக கூறுகிறார்.

இதனால் கவலை அடையும் ஹேமா சௌந்தர்யாவிடம் அது குறித்து கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா பாரதிக்கு தெரியாமல் நாம் கண்ணம்மாவிடம் கூறி சமையல் செய்து தர சொல்லலாம் என்று கூறி விடுகிறார். பின், லட்சுமி தன்னை பாரதியின் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு ஆட்டோக்காரரிடம் கேட்கிறார்.

இதனை முதலில் மறுக்கும் அவர், பின், லட்சுமி அடம் பிடிக்கவும் சரி என்று சொல்லி விடுகிறார். இந்த செய்தியினை கேட்கும் சௌந்தர்யா, அகில் மற்றும் அஞ்சலி அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இதனால் லட்சுமிக்கு பிடித்த உணவுகளை சமைக்க சொல்லுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் சௌந்தர்யா தனது வீட்டின் வாசலில் லட்சுமிக்காக காத்து இருக்கிறார். பின், லட்சுமி ஒரு வழியாக வந்து விடுகிறார். முதன் முறையாக பாரதியின் வீட்டிற்கு வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here