பாரதி கண்ணம்மா சீரியலில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ரோஷினி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து வருகிறது. கண்ணம்மாவிற்கு கிட்டத்தட்ட உண்மை தெரிய வந்துள்ளது. ஹேமா தன் குழந்தை என்ற உண்மை முழுமையாக தெரிய வந்தால் கண்ணம்மாவின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது.
பாரதி இப்பொழுது வரை கண்ணம்மாவை புரிந்துகொள்ளாமல் வெண்பா சொன்னதையே நம்பி வாழ்ந்து வருகிறார். 8 வருட வாழ்க்கையை வீணடித்து வருகிறார். அஞ்சலி வளைகாப்பு விழாவில் வெண்பாவை பற்றி அஞ்சலி சொல்ல கண்ணம்மாவிற்கு உண்மை தெரிய வந்துள்ளது.
இதற்கு மேல் கண்ணம்மா பாரதியுடன் வாழ முயற்சிப்பாரா?? லட்சுமியின் வாழ்க்கையை நினைத்து பாரதியிடம் மீண்டும் உத்தமி என்று நிரூபிக்க போராடுவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இன்ஸ்டாவில் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் தான் அது. இவர்கள் இணைந்து விட்டார்களா?? அல்லது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமா?? என்று ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்தால் அடுத்து கதையை முடிக்க வேண்டி இருக்கும். இதிலும் கண்டிப்பாக பெரிய ட்விஸ்ட் காத்துக்கொண்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்