“பாரதி கண்ணம்மா” சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியா தற்போது தனது புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாரதி கண்ணம்மா ஹரிப்ரியா
சின்னத்துறையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி பல நடிகைகள் முன்னணி நடிகையாக தற்போது நடித்து வருகின்றனர். ஆனால், சில நடிகைகள் மட்டுமே இன்று வரை அதே தன்மையுடன் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தனது முதல் சீரியல் மூலமாக அனைவரது மனதினை கவர்ந்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
போட்டியில் கலந்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – வெண்பா செய்ய போகும் சதித்திட்டம் என்ன??
அந்த குறும்படம் வெற்றி அடைந்ததை அடுத்து ஹரிணிக்கு சினிமா துறையின் மீது ஆசை வந்து அவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க தேர்வாகியுள்ளார். இதனை அடுத்து அவர் தனது எதார்த்தமான நடிப்பின் காரணமாக அனைவர் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டார்.
அதே போல் இவர் அந்த சீரியலில் ஒரு வாரமாக நடை பயணம் மேற்கொள்வது போல ஒரு காட்சி இருந்தது. இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டு அந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் சென்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அது மட்டும் இன்றி இந்த பொது முடக்கத்தின் போது அவர் புரட்சி பொங்கும் வசனங்களை பேசி அனைவரையும் ஈர்த்தார். இப்படியாக இருக்க தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் இவர் பாரதியார் புகைப்படம் போட்ட ஒரு சட்டையினை அணிந்துள்ளார். அதே போல் கேப்ஷனாக “மனதில் உறுதி வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது.