பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை வெளியே வந்ததற்கு அனைவரிடமும் கோவப்படுகிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை கடத்தி வைத்திருப்பது கண்ணம்மா தான் என்று முட்டாள் தனமாக நம்பி கொண்டுள்ளார். ஏன் பாரதி இப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் கடுப்பாக தான் உள்ளது. இதனால் கோவமடையும் சௌந்தர்யா அநியாயமாக உன் புத்தியால 8 வருசமாக கண்ணம்மா நடுத்தெருவில் நிக்கிறா.
அது பத்தாதுன்னு இப்போ ஜெயிலுக்கு வேற அனுப்பி இருக்க என்று சத்தம் போடுகிறார். மேலும் ஹேமாவை கண்டுபிடிப்பதை விட கண்ணம்மாவை ஜெயிலில் போடுவது தான் உனக்கு பெரிதாக இருக்கு என்று சொல்ல பாரதி உடைந்து போகிறார்.
வீடே இதனால் ரணகளமாகிறது. ஆனாலும் பாரதி திருந்தாமல் என் பக்கத்துல இருக்க நியாயத்தை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க என்று சொல்லி அழுகிறார். சௌந்தர்யாவின் மடியில் படுத்து கதறி அழுகிறார். அப்பொழுது லட்சுமி வர பாரதி அழுவதை பார்த்து ஏன் அழுகுறீங்க என்று கேட்கிறார்.
மேலும் கண்ணையும் துடைத்து விட பாரதிக்கு எதோ ஒரு உணர்வு தோன்றுகிறது. நான் ரொம்ப தப்பானவனா? என்று லட்சுமியிடம் கேட்க அதற்கு லட்சுமி நீங்க ரொம்ப நல்லவரு எந்த தப்பும் செஞ்சு இருக்க மாட்டீங்க என்று சொல்கிறார்.
இதனால் லக்ஷ்மியை கட்டிப்பிடித்து அழுகிறார் பாரதி. இது அனைவரையுமே கண்கலங்க வைத்தது. வீட்டில் உள்ள அனைவரும் கண்கலங்குகின்றனர். இன்றைய எபிசோடு முழுக்க பாசப்போராட்டங்களுடனே அரங்கேறியது என்றே சொலலலாம்.