பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவிற்கு உடல் நிலை மோசமாக இருக்கும் நிலையில் கண்ணம்மாவை அழைத்து வர வீட்டிற்கு செல்கிறார் பாரதி.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அதாவது ஏர்போர்ட் செல்லும் வழியில் ஹேமாவிற்கு திடீரென பிக்ஸ் வருகிறது. மருத்துவமனையில் சேர்க்க ஹேமாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. கடைசி நேரத்தில் கூட சமையல் அம்மா என்று புலம்ப டாக்டர் உடனே அவரை அழைத்து வர சொல்கிறார்.
பாரதியும் கண்ணம்மா வீட்டிற்கு வந்து நிலைமையை சொல்கிறார். மேலும் டாக்டர் சொன்னதால் தான் வந்தேன் என்றும் திமிராக பேசுகிறார். இதனால் கடுப்பாகும் கண்ணம்மா இப்போ கூட உன் திமிரு போகல என்று சொல்கிறார். பாரதி நீ வந்தால் வா இல்லைனா கிளம்பு என்று சொல்கிறார்.
ஹேமாவை மனதில் வைத்து கொண்டு தான் வருவதாக ஒத்து கொள்கிறார். அடுத்ததாக வழியில் பல பிரச்சனை ஏற்படுகிறது. காரை வேகமாக ஒட்டிக்கொண்டு வருவதால் போலீஸ் பிடிக்க போலீசாரிடமும் திமிராக பேசுகிறார். கண்ணம்மா வந்து நிலைமையை எடுத்து சொல்ல அதன் பிறகு விடுகின்றனர்.
மருத்துவமனையில் சௌந்தர்யா கண்ணம்மா வருவாளா?? என நினைத்து புலம்பிக்கொண்டுள்ளார். எப்படியாவது ஹேமாவை காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் வேண்டி கொண்டுள்ளனர். அப்பொழுது வெண்பாவை பார்த்து கோவமடைகிறார் சௌந்தர்யா. உனக்கு என்ன தான் பிரச்சனை, பாரதியை ஏத்தி விட்டு குளிர் காயிர என்று கண்டபடி பேசுகிறார்.
வெண்பாவும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மேலும் எங்க குடும்ப பிரச்சனையை பேசிட்டு இருக்கும்போது தலையிடாத என்று அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். அப்பொழுது கண்ணம்மாவை பாரதி அழைத்து வர குடும்பமே சந்தோஷமடைகிறது. வெண்பா அதிர்ச்சியாகிறார். கண்ணம்மா உள்ளே சென்று ஹேமாவிடம் பேசுகிறார். கண்ணம்மாவின் குரல் கேட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக கண் முழிக்கிறார் ஹேமா.
சமையல் அம்மாவை பார்த்தும் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். உள்ளே அனைவரும் வர ஹேமா கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படுவதை பாரதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னை ஹேமா தேடவில்லையே என்று நினைத்து கண்கலங்குகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.