பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா லக்ஷ்மியை தேடி பாரதி வீட்டிற்கு செல்ல அங்கு பெரிய பிரச்சனையே ஏற்படுகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி லக்ஷ்மியின் அம்மா கண்ணம்மா என்று கண்டுபிடித்ததும் பயங்கர கோவத்தில் உள்ளார். ஒரு சின்ன குழந்தையையும் பொய் சொல்ல வச்சு என்ன ஏமாத்திட்டாங்க என்று சொல்கிறார்.
கண்ணம்மா வரும் வரை அனைவரும் காத்து கொண்டிருக்க கண்ணம்மாவும் வீட்டிற்கு வருகிறார். அனைவருமே என்ன நடக்க போகிறது என்ற பதட்டத்தில் உள்ளனர். கண்ணம்மா வந்து பாரதியிடம் லட்சுமி எங்கே என்று கேட்க அவங்க அம்மா வந்தா தான் நான் லக்ஷ்மியை விடுவேன் என்று சொல்கிறார்.
லக்ஷ்மியை தன் பொறுப்பில் விட்டு சென்றுள்ளதாக கண்ணம்மா சொல்ல பாரதி லக்ஷ்மியை விடுவதற்கு மறுக்கிறார். மேலும் லக்ஷ்மியின் அம்மா வரும் வரை லட்சுமி தன்னுடனேயே இருக்கட்டும் என்றும் கூறுகிறார்.
அப்பொழுது கண் முழிக்கும் லட்சுமி எழுந்து கீழே வருகிறார். இதற்கிடையே கண்ணம்மாவின் அப்பாவிற்கு லட்சுமி தன் பேத்தி என்ற உண்மை தெரிந்ததும் மிகவும் சந்தோஷமடைகிறார்.
மேலும் கண்ணம்மா கடைசி வரை லட்சுமி தன் மகள் தான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் பாரதி கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. 8 வருஷம் ஆனாலும் லட்சுமி ஓட அம்மா வந்தா தான் விடுவேன் என்று சொல்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க அதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்