பாரதி தான் அப்பா என்றே தெரியாமல் பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி – பிறந்த நாள் விழாவில் உண்மை வெளிவருமா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி லட்சுமியையும், ஹேமாவையும் அழைத்து கொண்டு டிரஸ் எடுக்க செல்கிறார். இதில் லட்சுமியின் பாசம் பாரதிக்கு என்னவோ செய்கிறது. தன் மகள் என்றே தெரியாமல் பாசம் வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் லக்ஷ்மியும், ஹேமாவும் கடைக்கு செல்கின்றனர். லக்ஷ்மிக்கு அந்த கடையை பார்க்க வித்தியாசமாக உள்ளது. இவ்வளவு பெரிய கடையா?? என்று ஆச்சரியப்பட்டு பார்க்கிறார். இது பாரதிக்கு என்னவோ போல உள்ளது. அடுத்ததாக ஹேமாவின் கையை பிடித்து பாரதி நடக்க லட்சுமி எதோ ஏக்கமாக உள்ளது.

பாரதி கையை பிடிக்கலாமா?? வேணாமா?? என்று யோசிக்க பாரதி லக்ஷ்மியின் தடுமாற்றத்தை பார்த்து கையை பிடிக்கிறார்.  இதனால் லட்சுமி பூரித்து போகிறார். மேலும் கடையில் ஹேமாவுக்கு லட்சுமி டிரஸ் செலக்ட் செய்கிறார். இருவரும் எப்படியோ டிரஸ் எடுத்து விடுகின்றனர்.

இருவரும் டிரஸ் அணிந்து வர பாரதியை ஓடி வந்து கட்டி பிடிக்கின்றனர். இதனை பார்த்து ரசிகர்களும் கண்கலங்கி விட்டனர். அடுத்ததாக கண்ணம்மா லட்சுமி பாரதியுடன் பழகுவதை நினைத்து பார்க்கிறார். என்ன தான் தள்ளி இருந்தாலும் ரத்த பாசம் ஒன்று சேர்த்து விடுகிறது என்று நினைத்து கொள்கிறார்.

அடுத்ததாக அஞ்சலியும் அகிலனும் பேசிக்கொண்டுள்ளனர். அப்பொழுது லட்சுமிக்கும், ஹேமாவுக்கு பிறந்த நாளுக்கு எதாவது வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். அடுத்ததாக பாரதி லட்சுமியையும், ஹேமாவையும் ஐஸ் கிரீம் பார்லருக்கு அழைத்து செல்கிறார்.

இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 3,523 ஆக உயர்வு!!

லக்ஷ்மிக்கு அது எல்லாம் புதிதாக உள்ளது. ஐஸ் கிரீம் சாப்பிட தெரியாமலும் தவிக்கிறார். இதனை பார்த்த பாரதி லக்ஷ்மிக்கு ஊட்டி விடுகிறார். மேலும் தன் அம்மா குச்சி ஐஸ் தான் வாங்கி தருவார். இதெல்லாம் எனக்கு புதுசு என்று சொல்ல பாரதிக்கும் ஹேமாவிற்கு என்னவோ போல ஆகிறது.

அடுத்ததாக லட்சுமி ஹேமாவிடம் உனக்கு எப்பொழுது பிறந்த நாள் என்று கேட்க 5 ஆம் தேதி என்று சொல்கிறார். தனக்கும் 5 தான் பிறந்த நாள் என்று சொல்கிறார். இது பாரதிக்கு பெரிய ஷாக்.

பிறந்தநாளுக்கு என்ன பண்ண போறீங்க என்று கேட்க 50 ரூபாய்க்கு சாக்லேட் அப்பறம் அவோளோ தான் என்று சொல்கிறார். பாரதி தன் வீட்டிற்கு வரும்படி கூறுகிறார். இதனால் சந்தோசப்படும் லட்சுமி அம்மாவிடம் கேட்டு சொல்வதாக சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here