பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா ஜெயிலுக்கு சென்ற கோவத்தில் பாரதி இருக்க இதனால் விபரீத முடிவெடுக்கிறார். அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை நாட்கள் தனக்கு தொல்லை கொடுத்து கொண்டிருந்த வெண்பாவை திட்டம் போட்டு கருக்கலைப்பு விஷயத்தில் ஜெயிலுக்கு அனுப்புகிறார் கண்ணம்மா. இதனால் ஜெயிலுக்கு சென்ற வெண்பாவிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க செல்கிறார் பாரதி.
வெண்பா கண்ணம்மா மேல் இருக்கும் கோவத்தில் விதவிதமாக பொய் சொல்கிறார். இதனை நம்பிவிடும் பாரதி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, கண்ணம்மாவிற்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் போக லட்சுமி பாரதியிடம் அழைத்து வருகிறார். கண்ணம்மாவை செக் செய்து விட்டு அவர்க்கு ஒன்றும் இல்லை, இந்த மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும் என்று கூறுகிறார்.
ஒண்ணுமே இல்லைனா எதற்கு மாத்திரை என்று கேட்க அதற்கு பாரதி இனி வரும் பிரச்சனைகளை தாங்கிக்க தைரியம் வேணும்ல என்று சொல்ல கண்ணம்மாவிற்கு எதோ சந்தேகமாகிறது. வீட்டிற்கு வந்தால் விவாகரத்து பத்திரம் வர 8 வருட கஷ்டப்பட்டு என்ன இப்படி கைவிட இவருக்கு எப்படி மனசு வந்துச்சு என்று சொல்லி அழுகிறார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்