நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாது என ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. மே 23ம் தேதி முதல் வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் எனவும் சில நிபந்தனைகளையும் வகுத்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிகளில் ஒரே நேரத்தில் ரூ.20,000மும், மற்றவர்கள் ரூ.4,000 வரை மட்டுமே மாற்ற முடியும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும் ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வங்கிகளின் விடுமுறை நாட்களை முன்கூட்டியே பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அட்டவணை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
கேரள ரயில் எரிப்பு சம்பவம்., சாட்சியாக வந்த நபர் தற்கொலை., தீவிர விசாரணையில் போலீசார்!!
இதில் மே 23ம் தேதி மாதம் முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி விடுமுறை நாட்களை மாநில வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதோடு மாதந்தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.