நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்கள் ஸ்டிரைக் – வாடிக்கையாளர்கள் பலத்த அதிர்ச்சி!!

0
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்கள் ஸ்டிரைக் - வாடிக்கையாளர்கள் பலத்த அதிர்ச்சி!!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்கள் ஸ்டிரைக் - வாடிக்கையாளர்கள் பலத்த அதிர்ச்சி!!

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள மக்கள், பண பரிவர்த்தனைகளுக்காக வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனையை பயன்படுத்தினாலும், இன்னும் ஒரு சில மக்கள் வங்கிகளுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல் குறித்த அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு வங்கி ஊழியர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், எல்.ஐ.சி ஊழியர்களைப் போலவே தங்களுக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டம் வருகிற, மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம்  அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டாலும், வழக்கமான சேவைகளில் தொய்வு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here