வங்க தேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் அந்நாட்டு அரசு ஜூன் 28 முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் பரவல் ஓய தொடங்கிய நிலையில் மீண்டும் மூன்றாம் அலை மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. உலக நாடுகள் சிலவற்றில் இந்த மூன்றாம் அலை தற்போது ஆரம்பித்துள்ளது. அதே போல வங்க தேசத்திலும் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசு ஊரடங்கை கடுமையாக்க உள்ளது.
இது குறித்து தெரிவித்த அந்நாட்டு அரசு, “நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் ஜூன் 28 முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு கடுமையப்படவுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்களும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அவசர உதவி சேவைகள் மட்டுமே இந்த 7 நாட்களுக்கு இயங்கும்” இவ்வாறு பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் தற்போது தொற்று எண்ணிக்கை 21.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்ற வாரத்தில் இந்த விகிதம் வெறும் 15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்