வங்கதேசத்தில் கொரோனா தொற்று குறையாமல் நீட்டித்த வண்ணம் உள்ளதால் அந்நாட்டு அரசு மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீடித்துள்ளது.
இந்தியாவில் ஓரளவு குறைந்த கொரோனா இரண்டாம் அலை பரவல் உலக நாடுகளை தற்போது ஆட்டி படைத்து வருகிறது. இதனால் அந்நாடுகள் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தற்போது இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் கொரோனா இரண்டாம் அலை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நாளையுடன் முடியும் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அந்நாட்டு அரசு நீடித்துள்ளது.
வங்கதேச அரசு கடந்த 1 ஆம் தேதி, முழு ஊரடங்கை ஜூன் 7 ஆம் தேதி வரை அமல்ப்படுத்தியது. ஆனால் குறையும் என்று எதிர்பாக்கப்பட்ட தொற்று எண்ணிக்கை குறையாமல் மாறாக கூடி கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் அங்கு 9,964 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் 164 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தொற்றின் வீரியம் குறையாத காரணத்தினால் நாளையுடன் (ஜூலை 7,2021) முடியும் முழு ஊரடங்கை ஜூலை 14 ஆம் தேதி வரை வங்கதேச அரசு நீடித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்