ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி எத்தனை தடவைனாலும் பயணம் செய்யலாம்! கவர்ச்சி திட்டம் அறிவிப்பு!!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - இனி எத்தனை தடவைனாலும் பயணம் செய்யலாம்! கவர்ச்சி திட்டம் அறிவிப்பு!!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - இனி எத்தனை தடவைனாலும் பயணம் செய்யலாம்! கவர்ச்சி திட்டம் அறிவிப்பு!!

பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யும் கவர்ச்சி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி:

பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம், அதன் பயணிகளுக்கு அதிரடி கவர்ச்சி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, மெட்ரோ ரயிலில் ஒருநாள் மற்றும் 3 நாட்களுக்கு பயணம் செய்யும், சிறப்பு பயண பாஸ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு ரூபாய் 200 அல்லது மூன்று நாட்களுக்கு ரூபாய் 400 என கட்டணம் செலுத்தி ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் மையங்களில் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த பாஸ் வைத்துக் கொண்டு ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவில்லா பயணம் செய்யும் சலுகை திட்டத்தில், திரும்ப செலுத்தத்தக்க 50 ரூபாய் வைப்புத்தொகை திட்டமும் அடங்கும். பயனர்கள் பெற்றுக்கொள்ளும், இந்த வைப்புத்தொகை பாஸை, எந்த ரயில் நிலையத்தில் வேண்டுமானாலும் ஒப்படைத்து 50 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாஸ் எந்த சேதமும் இன்றி, முழுமையாக செயல்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நாளை முதல் அமலுக்கு வரும் என பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here