பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளால் விரும்பி செல்லப்படும் இடங்களில் ஒன்று தான் மலைகளின் இளவரசி கொடைக்கானல். பல்வேறு வனவிலங்குகள் உள்ள கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7200 அடிக்கும் மேல் உள்ளது. இங்கு சுற்றுலாவாசிகள் அதிகம் செல்வதால் தான் இயற்கையை சீரழிக்கும் பிளாஸ்டிக் பொருட்களும் அதிக அளவில் குவிகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் தரைப்பகுதியில் இருந்து தண்ணீர் பாட்டில், தட்டு, கவர் உட்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் கொடைக்கானல் எடுத்து செல்வதற்கு ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புழங்குவதாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சமந்தாவின் மர்ம நோயில் இவ்வளவு சிக்கலா? ஐயோ, அப்ப சம்மு சினிமாவை விட்டு போய்டுவாங்களா?
இதனால் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் பேருந்து உட்பட சுற்றுலாப்பயணிகளை சோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.