வளர்ந்து வரும் தொல்நூட்ப வளர்ச்சி மற்றும் வாகன புகையினால் சுற்று சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது. மேலும் மனிதனின் அன்றாட வாழ்வில் சிறிது நேர பயனுக்காக ஆயிரம் ஆண்டு மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கின்றன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் இந்த பிளாஸ்டிக் பயனுக்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பொது இடங்கள் மற்றும் கோவில் தளங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசு இந்த ஆண்டு முதல் நாளில் இருந்து வழிபாட்டு தலங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி தற்போது புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளிலும் தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.