கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டிக்டாக், பப்ஜி, டூயல் ஸ்பேஸ் போன்ற செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மாறாக தற்போது ஆன்லைன் சூதாட்ட மற்றும் தனிநபர் கடன் வழங்கும் செயலிகள் பெருகி வருகிறது. இதனால் பெரும்பாலானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது போன்ற செயலிகள் கைபேசி விவரங்களை திருடி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலான செயலிகள் சீனாவுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் சீன செயலிகள் உட்பட 232 வெளிநாட்டு செயலிகளை தடை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளனர் .
விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு பணி., அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!!!
இதில் சூதாட்ட தொடர்புடைய 138 செயலிகளும், அங்கீகரிக்கப்படாத 94 கடன் செயலிகளும் அடங்கும். ஆனால் இதுவரை தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியல்கள் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.