பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய மற்றும் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு:
பிஎஸ் 4 விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்ட வாகனங்கள் 2020 ஏப்ரல் க்கு பிறகு விற்பனையோ பதிவோ செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!
பிஎஸ்4 ரக வாகனங்களை மார்ச் 31 க்கு பிறகு வாகன நிறுவனங்களும் அரசும் கால அவகாசம் கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது. மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம், பிஎஸ் 4 வாகனங்களின் விற்கப்படாத சரக்கு குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
மேலும் உச்சநீதிமன்றம் 10 நாட்கள் அவகாசம் கொடுத்த உத்தரவை மீறிய காரணத்தால், பி எஸ் 4 ரக வாகனங்களை விற்பனையோ பதிவோ செய்யக்கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்தார்.
பிஎஸ்-4-ல் தொழில்நுட்ப மாற்றம்:
பி எஸ்-4 ரக வாகனங்கள் உமிழும் புகையினால் சுற்றுச்சூழல் கெடுவதோடு மனிதர்களின் உடலுக்கும் கேடு விளைவதால் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் அளவு குறைக்கும் வகையில் எரிபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.