கொரோனாவுக்கு ஊசிலாம் போடக்கூடாது.. எக்குத்தப்பாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பாபா ராம்தேவ்!

0
கொரோனாவுக்கு ஊசிலாம் போடக்கூடாது.. எக்குத்தப்பாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பாபா ராம்தேவ்!

மக்களை கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து காக்க தடுப்பூசி சரிவராது. யோகா மற்றும் ஆயுர்வேதம் அவசியம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாபா ராம்தேவ்:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதனை தடுக்கும் விதமாக அரசாங்கம் ஏராளமான நடவடிக்கை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்படாது, மீண்டும் நோய் தொற்று ஏற்படும் என்று கூறி பெரும் சர்ச்சையை பாபா ராம்தேவ் கிளப்பினார். இவரின் கருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது மீண்டும் சர்ச்சையில் பாபா ராம்தேவ் சிக்கியுள்ளார்.

அதாவது ஹரித்துவாரில் நேற்று இவர் அளித்த பேட்டியில் இரு தடுப்பூசிகள் செலுத்திய பின்பும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘யோகா, ஆயுர்வேதாவின் துணையின்றி, எந்தவிதமான தடுப்பூசியாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியாது. இந்த உலகமே மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் மக்களை தவறாக வழி நடத்துகிறது’ என்று பாபா ராம்தேவ் பேசியுள்ளார். இவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ரெசிடென்ட் டாக்டர்ஸ் பெடரேஷன் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here