பாக்கியாவின் பிஸ்னஸிற்காக கோபியிடம் பேசும் இனியா – விறுவிறுப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியல்!!

0

இன்று “பாக்கியலட்சமி” சீரியலில் பாக்கியாவின் பிசினஸ் தன்னால் தான் நின்று விட்டது என்பதை நினைத்து மிகவும் சோகம் அடைந்து விடுகிறார். அதே போல் தான் பிசினஸ் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் விடாப்பிடியாக இருக்கிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் இன்று பாக்கியா தான் மீண்டும் பிசினஸ் செய்ய இருப்பதாக கூறுகிறார். இதனால் கோபி மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். முதலில், அவர் பொறுமையாக எடுத்து சொல்கிறார். ஆனால், பாக்கியா தான் ராதிகாவிடம் பணம் வாங்கி இருப்பதாகவும், அதனை திருப்பி கொடுக்காவது தான் பிசினஸ் செய்ய வேண்டும் என்று பாக்கியா தன் தரப்பு வாதத்தை கூறுகிறார்.

கும்பமேளாவில் பக்தர்களுக்கு தடை?? பிரதமர் கோரிக்கை எதிரொலி!!

இதனை அடுத்து ராதிகாவிடம் வாங்கிய பணத்தினை தான் கொடுத்து விடுவதாக கோபியின் அப்பா கூறி விடுகிறார். அத்துடன் பிரச்சனை முடிந்து விட்டது என்று கோபி சென்று விடுகிறார். அத்தனையும் பார்க்கும் இனியா தன்னால் தான் இப்படி அம்மாவின் பிசினஸ் பாதிக்கப்பட்டு விட்டது என்பதை நினைத்து மிகவும் சோகம் அடைந்து விடுகிறார்.

பின், இனியா தனது தந்தையை தனியாக சந்தித்து பேசுகிறார். தனது அம்மாவிற்காக பேசுகிறார். அதே போல் அம்மா தன்னை சரியாக கவனித்து கொண்டார் என்றும் தான் ஒவ்வொரு முறையும் பொய் சொல்லி விட்டு சென்றதாக கூறுகிறார். ஆனால், கோபி அவரை சமாதானம் செய்து விட்டு அனுப்புகிறார். இப்படியாக இருக்க, ராதிகாவின் வீட்டினை கண்டுபிடித்து ராஜேஷ் வந்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் ராதிகா மற்றும் மயூரி இருவரும் பயந்து விடுகின்றனர். அப்போது ராஜேஷ் மற்றும் ராதிகா இருவருக்கும் சண்டை வலுத்து விடுகிறது. தனது வாழ்க்கையை நினைத்து ராதிகா மிகவும் நொந்து போய் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here