இல்லத்தரசிகளின் வாழ்க்கையை பிரதிபலித்து மக்களின் பேராதரவோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபிக்கு நடந்த விபத்து குறித்து சந்தேகப்படுகிறார் எழில். மேலும் கோபியிடம் தாறுமாறாக பல கேள்விகளை கேட்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலின் சனிக்கிழமை எபிசோட்டில் காயம் பட்ட கோபியை குடும்பமே விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். மேலும் காலில் அடிபட்ட பாக்கியாவும் தனது வலியையும் பொருட்படுத்தாது அவரை கவனிக்கிறார். இந்நிலையில் இன்றைய கதைக்களமாக ஜெனியின் உதவியுடன் சமையல் வேலைகளை செய்கிறார் பாக்கியா.
அந்த வேளையில் அங்கு வரும் எழில் பாக்கியா சமைப்பதை பார்த்து கோபப்படுகிறார். அதன் பின்னர் கோபிக்கு நடந்த விபத்து பற்றி கண்ணீருடன் கூறுகிறார் பாக்கியா. அதன் பிறகு கோபியை பார்க்க அவரின் ரூமுக்கு செல்கிறார் எழில். அங்கு நடந்ததை விசாரிக்கும் எழிலிடம், காரிலிருந்து இறங்கும் போது பைக்கில் வந்த ஒருவன் தள்ளி விட்டதாக கூறுகிறார் தாத்தா. மேலும் அவன் மீது போலீஸ் புகார் கொடுக்கலாம் எனவும், ஸ்கூல் வெளியில் இருக்கும் CCTV ஆதாரமாக வைத்து போலீசில் புகார் கொடுக்கலாம் என எழில் கூறுகிறார்.
இதனை கோபி ஏற்காத கோபி போலீஸ் புகார் எல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். அதன் பிறகு எழில் மருந்து சீட்டை கேட்கிறார். அதற்கு கோபி, எழில் மீது கோபப்படுகிறார். இதையடுத்து கோபியின் காயங்களை பார்த்து சந்தேகத்துடன் வெளியேறுகிறார் எழில். அதன் பிறகு கீழே வந்த எழில் பாக்யாவிடம், உன்னை நீ தான் கவனித்து கொள்ள வேண்டும். வேறு யாரும் உன்னை பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என கூறி பாக்யாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.
அதன் பிறகு பாக்கியாவை கோபிக்கு துணையாக இருக்க சொல்கிறார் ஈஸ்வரி. இதனை மறுக்கும் எழில் அம்மாவுக்கு மாடி ஏற முடியாது, அப்பாவுக்கு ஒன்றும் இல்லை என கூறுகிறார். இதனால் தாத்தா கோபியுடன் சேர்ந்து படுக்க போவதாக சொல்கிறார். இதையடுத்து வழக்கம் போல ஈஸ்வரி பாக்கியாவை மட்டம் தட்டி பேசுகிறார்.
இந்நிலையில் கோபிக்கு போன் செய்யும் இன்ஸ்பெக்டர், ராஜேஷை கைது செய்து விட்டதாகவும், ஒரு வருடத்திற்கு இனி சிறையில் தான் ராஜேஷ் இருக்க வேண்டும், பல வழக்குகளை அவரின் மீது போட்டு உள்ளதாகவும் கூறுகிறார். இதற்கு நன்றி தெரிவிக்கிறார் கோபி. இதையடுத்து ராதிகாவுக்கு போன் செய்யும் கோபி தான் மருத்துவமனையில் இருப்பதாகத் பொய் சொல்கிறார். இதனை கேட்டு வருத்தப்படுகிறார் ராதிகா. அதன் பிறகு அவருக்கு ஆறுதல் கூறுகிறார் கோபி. இவ்வாறாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்