விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், இனியா எடுக்கப் போகும் அந்த அதிரடி முடிவு குறித்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.
இனியா முடிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், தற்போது அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுத்தவுடன், வீட்டில் உள்ள எல்லோரும் பாக்யாவிடம் வாதாடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கோபி, விவாகரத்து கொடுக்க பாக்யா எப்போது தயாராகி விட்டார். இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தார் என குற்றம் சுமத்துகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
ஆனால், பாக்கியா தொடர்ந்து மௌனம் சாதிக்கிறார். ஒரு கட்டத்தில், தன் மகள் இனியாவை பார்த்து அம்மா வேணுமா? இல்லை அப்பா வேணுமா? நீயே முடிவு எடுத்துக் கொள் என கோபி சொல்கிறார். ஆனால், பதில் ஏதும் சொல்லாமல் தொடர்ந்து இனிய அழுது கொண்டே இருக்கிறார். இது குறித்த ப்ரோமா தற்போது வெளியானது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இனியா அப்பா தான் வேண்டும் என முடிவெடுப்பார் என்றும், ஏனெனில் அப்பாவுடன் இருந்தால் பாட்டி, தாத்தா, அண்ணன் என எல்லோரும் இருப்பார்கள். அம்மாவும் விரைவில் வந்து சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இனியா இந்த முடிவை எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் இது குறித்த காட்சிகள், அடுத்தடுத்து எபிசோடுகளில் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.