விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய எபிசோட் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
வைரல் எபிசோட் :
இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றிய உண்மைகள் தெரிந்ததால், ராதிகா கோபி மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார். இதுபோக, ராதிகா அம்மா எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் கோபியை ராதிகா ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதையடுத்து மீண்டும் வீட்டுக்கு வரும் கோபியிடம், மிகவும் உக்கிரமாக ராதிகா நடந்து கொள்கிறார். யாரும் எதிர்பாராத விதமாக சட்டென்று ராதிகாவின் காலில் விழுந்து, கோபி கெஞ்சுகிறார். ஆனால், இனிமேல் வீட்டுக்கு வராதே என சொல்லி, கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்.
இதனால் நிலை தடுமாறிய கோபி கீழே விழ போகிறார். இந்த சம்பவம் அனைத்தையும் ராஜேஷ் ரோட்டில் இருந்து பார்க்கிறார். இது குறித்த காட்சிகள், இன்று எபிசோடில் காட்டப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது. அதுவும் குறிப்பாக ராஜேஷ் காட்சிகள் காட்டப்படுவதால், இனி எபிசோடு சூடுபிடிக்க வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்