விஜய் டிவி ஹிட் சீரியல்கள் வரிசையில் இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஒளிபரப்பான எபிசோட்டில் குடும்பத்துடன் கோவிலில் உட்கார்ந்த படி பாடல் ஒன்றை பாடுவார். அந்த பாடல் இவர் தனது சொந்த குரலில் பாடிய பாடலாகும். இதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா முதலில் விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அந்த சீரியல் அவருக்கு அந்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு மற்றொரு பிரபல சேனலான சன் டிவியில் திருமகள் சீரியலில் வில்லியாக நடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாக்கியலட்சுமி சீரியல்.
இந்த சீரியலில் இளம் வயதிலேயே கணவனை இழந்து படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஊரை விட்டு வந்து தன் மாமனார் மாமியார் உடன் தங்கி படிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா. எதிர்பாராத விதமாக சந்திக்கும் எழில், அமிர்தா நட்புடன் பழகி வருகின்றனர். நாளடைவில் இது நட்பாகவே இருக்குமா அல்லது இவர்களின் இடையே காதல் பூக்குமா என்பது வரும் எபிசோடுகள் மூலமே தெரிய வரும்.
இந்நிலையில் ரித்திகா அவர்கள் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது ஒரு சில நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒளிபரப்பான பாக்கியலட்சுமி எபிசோட்டில் அமிர்தா அவரின் மாமனார், மாமியார் மற்றும் எழில் சாமி கும்பிடுவதற்காக ஒரு கோவிலுக்கு செல்கின்றனர்.
அங்கு அமிர்தா யமுனை ஆற்றிலே எனத் தொடங்கும் ஒரு பாடலை பாடுகிறார். அந்த பாடல் இவர் தன்னுடைய சொந்த குரலால் பாடியுள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா என வாயடைத்து போய் உள்ளனர். மேலும் சிலர் உங்களுக்கு அருமையான குரல் உள்ளது. முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடல்களை பாடுமாறு தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்