பாக்கியலட்சுமி தொடரில் ஒரு மணி நேரத்தில் 100 சமையல் வகைகளை செய்ய பாக்கியா தயாராகி வருகிறார். kuஆனால் கோபியோ தொடர்ந்து பாக்கியாவை தீட்டி அவமானப்படுத்துகிறார். பாக்கியாவிற்கு ஆறுதலாக ராமமூர்த்தி ஈஸ்வரி மட்டுமே உள்ளனர். இரவில் பாக்கியா தூங்காமல் தனியாக புலம்ப அப்பொழுதும் கோபி இந்த போட்டியில தோத்துட்டா வந்து என்கிட்ட புலம்பாத என திட்டுகிறார்.
மறுநாள் அமிர்தாவை கோவிலுக்கு அழைத்து செல்கிறார் எழில். அப்பொழுது எழிலின் தோழியான ஜானுவும் அங்கு வர அமிர்தாவிடம் ‘நீங்க ரொம்ப லக்கி., நான் காதலை சொன்னபோது எழில் மறுத்துவிட்டான்..’ என சொல்கிறார். பதிலுக்கு அமிர்தாவோ நான் வேண்டுமானால் எழிலிடம் பேசுகிறேன் என்று சொல்ல ஜானு தடுத்து, நீங்கள் எழிலை விரும்புகிறீர்கள்.. சீக்கிரம் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள் என நல்லவிதமாக அட்வைஸ் செய்கிறார்.
பிறகு கோவில் பூசாரி அர்ச்சனை செய்த பூவை தர எழில் வாங்கி அமிர்தா தலையில் வைத்துவிட அமிர்தா கண்கலங்குகிறார். வீட்டுக்குப் சென்றதும் அமிர்தா எழில் கையை பிடித்து நம்பலாமா.. எனக் கேட்க கண்டிப்பா நீங்க என்னை நம்பலாம் என்னைக்கும் நான் உங்க கூட இருப்பேன் என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்