தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பப்படும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தன் அம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து எழில் பாக்கியாவை கோர்ட்டில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். இந்த பக்கம் வீட்டில் ஈஸ்வரி கோபியை கண்டபடி திட்டுகிறார். ‘இவ்வளவு நேரம் எங்க போயிருந்த ஒரு போன் பண்ணா எடுக்க மாட்டியா., எதுவா இருந்தாலும் சொல்லிட்டு போ’ என்று சொல்ல ராமமூர்த்தி கோவம் தாங்காமல் கோபியை அடித்தே விடுகிறார்.
பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் நடந்த எல்லாவற்றையும் செல்வி பாக்கியாவிடம் கூற பாக்கியாவும் வருத்தப்படுகிறார். பிறகு எல்லோரும் டைனிங் ஹாலில் இருக்கும் சமயம் கோபி பாக்கியாவிடம் ‘உனக்கு இதெல்லாம் தேவைதானா.. இந்த சமையல் வேலை எல்லாம் எதுக்கு.. உனக்கு வீட்டுல இருந்தா இந்த பிரச்சனைல எதுவும் இல்லை என கூற பாக்கியாவுக்கு என்னவோ போல் ஆகிறது.
பிறகு வெளியான ப்ரோமோவில் ஜெனி எழிலிடம், கோபி பாக்கியாவை இனி சமைக்க வேண்டாம் என சொன்னதை பற்றி கூறுகிறார். இந்த காட்சிகள் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் காட்டப்படவுள்ளன. எப்படியும் பாக்கியாவை வீட்டொடு முடக்கி வைக்கவே கோபி இந்த சதி திட்டத்தை திட்டி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. இவ்வளவு பித்தலாட்டங்களை செய்யும் கோபியின் முகத்திரை எப்பொழுது கிழியும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்