பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. ஒருபக்கம் அம்ரிதாவை கிண்டல் செய்த ரவுடிகளிடம் எழில் தான் அம்ரிதாவின் புருஷன் என சொல்ல அம்ரிதாவிற்கும் எழில் மேல் காதல் வருகிறது. மறுபுறம் கோபியின் கள்ளக்காதலை பொறுத்து கொள்ள முடியாத அப்பா கோபி அசந்த நேரத்தில் கழுத்தை நெரித்து கொள்ள துணிகிறார்.
இதனால் பதறி அடித்து ஓடுகிறார் கோபி. மேலும் உன்னை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார் ராமமூர்த்தி. மறுபுறம் இனியா தன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வது பற்றி பாக்கியவிடம் பேச பாக்கியாவும் இனியாவுடன் வருவேன் என்கிறார். இதை மறுத்த இனியா நீ வேண்டாம்.. நான் பாட்டியுடன் செல்வேன் என்கிறார். மேலும் நீயும் அப்பாவும் விவகாரத்து செய்தால் நான் அப்பாவுடன் தான் செல்வேன் என பாக்கியா தலையில் குண்டை தூக்கி போடுகிறார்.
ஏற்கனவே இனியாவுடம் கோபி ஹோட்டலில் விவாகரத்து பற்றி பேசியிருப்பார். அதை நினைத்து இனியா இப்படி சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். எப்படியும் நடப்பதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது பாக்கியாவிற்கு இன்னும் சில தினங்களில் விவாகரத்து விஷயம் தெரியவரும் என்பது மட்டும் தெரிகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்