போக வேற இடமில்ல.. ராதிகாவால் நடு ரோட்டிற்கு வந்த கோபி – பாக்கியலட்சுமி சீரியல் உச்சகட்ட பரபரப்பு!

0

பாக்கியலட்சுமி தொடரில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்து தற்போது கோபி எதிராக பாக்கியா நிற்கிறார். மேலும் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல வீட்டில் உள்ள யாராலும் எதிர்த்து பேச முடியவில்லை. இதனால் வீடு கட்ட செலவான 40 லட்சம் பணத்தை கொடுத்தால் போகிறேன் என்கிறார் கோபி.ஆனால் அதற்கும் அசைந்து கொடுக்காத பாக்கியா, 1 வருடத்தில் அந்த பணத்தை தருகிறேன் என ஒப்புக்கொள்கிறார். இதை கோபியும் எதிர்பார்க்கவில்லை. கடைசியில் வேறு வழியின்றி கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார். பாக்கியாவை தான் கோபி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார் என ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருந்த சூப்பரான ட்விஸ்ட்டாக கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடுரோட்டில் தன் நண்பருக்கு போன் செய்து வரச்சொல்லி எங்கே போவது என தெரியாமல் கோபி புலம்புகிறார். கண்டிப்பாக இனி கோபி ராதிகா வீட்டிற்கு தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோபி மீது கோவத்தில் இருக்கும் ராதிகா கண்டிப்பாக கோபியை அசிங்கப்படுத்தாமல் இருக்கமாட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here