பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்து விட்டதால் கோபியை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் கோபி ராதிகாவிற்காக ராமமூர்த்தியையே எதிர்த்து பேசுகிறார்.
பாக்கியலட்சுமி:
தன் அப்பாவுக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதால் முதலில் பயந்த கோபி தற்போது தன் அப்பாவையே எதிர்த்து நிற்கிறார். மேலும் ராதிகாவிடம் சாப்பாடு கொடுக்க செல்லும்போது அனைத்து உண்மைகளையும் சொல்ல ராமமூர்த்தி முற்பட அதையும் சத்தம் போட்டு அனைத்தையும் கெடுத்து விடுகிறார் கோபி.
மேலும் ராமமூர்த்தியிடம் தனியாக நீங்கள் என்ன வேணும்னாலும் செய்துகொள்ளுங்கள் என சவால் விடுகிறார். பின்னர் மறுநாள் ராதிகா வீட்டிற்கு வழக்கம் போல் சென்று ராதிகாவை தொட்டு தொட்டு பேசுவதை ராதிகா அம்மா பார்த்து விடுகிறார்.
கோபி சென்றபின் ராதிகா அம்மா அவரை கண்டபடி திட்டுகிறார். உனக்கு பெண் தோழிகளே இல்லையா என கேக்கிறார். ராதிகாவும் எனக்கு அவர் கடிமான சூழ்நிலைகளில் உறுதுணையாக இருந்ததாக சொல்கிறார்.
அதை தொடர்ந்து ஹோட்டலில் தன் நண்பனுடன் கோபி நொந்து பேசிக்கொண்டிருக்கிறார். மேலும் தான் ராதிகாவை விருப்புவது உண்மை என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்