பணம் பறிபோனதால் பாக்கியாவை டார்ச்சர் செய்யும் கோபி.. குற்றவாளியை நெருங்கிவிடும் எழில்!!

0

பாக்கியாவை ஏமாற்றி பணத்தை பறித்தவரை எழில் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். மறுபுறம் பாக்கியாவை வீடே தீட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், கோபி பாக்கியாவை கண்டமேனிக்கு தீட்டி வீட்டில் இருக்கும் பொருட்களை உடைக்கிறார். பாக்கியாவின் மாமனார் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளார். மறுபுறம் எழில் பணத்தை ஏமாற்றியவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இது எதுவும் தெரியாத அமிர்தா குடும்பம் எழில் ஏன் வரலை என கேட்டு அமிர்தாவை போன் செய்ய சொல்கின்றனர். ஆனால் எழில் அட்டென்ட் செய்யவில்லை. இது அவர் மீது அமிர்தாவிற்கு இன்னும் வெறுப்பை உண்டாக்குகிறது.

அதை தொடர்ந்து மளிகை காரரும், அண்டைவீட்டாரும் பாக்கியாவின் வீட்டு வாசலிலேயே நின்று பணத்தை கேட்டு சண்டை போடுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் கோபிக்கு பத்திக்கொண்டு வருகிறது. அதே சமயம் பணத்தை ஏமாற்றியவர்களை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டார் எழில்.

பணத்தை ஏமாற்றிய ராஜேஷ் மச்சானை கண்டுபிடிக்கும் எழில் அவரை அடித்து உடைத்து ராஜேஷ் பற்றிய  உண்மையை அவரிடம் இருந்து வாங்குகிறார். இருப்பினும் எழில் முழுதாக விசாரிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.

அதன் பின்னர் இனியா அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். கோபி உள்பட குடும்பத்தினர் அனைவரும் இனியாவை சமாதானம் செய்கின்றனர். பின்னர் நாளைக்கு காலை அனைவரும் பணம் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்பார்களே என பாக்கியா நொந்து போய் அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது எழில் போன் செய்து ஆறுதல் கூறி நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இதோடு இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here