விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று எழில் தனது தந்தை வாயை திறந்தாலே அட்வைஸ் மட்டுமே செய்கிறார் என்று பாக்கியாவிடம் குற்றம் சாட்டுகிறார். பாக்கியாவின் தாயார் கஷடப்படுவதால் அவரை பார்க்க அவரது வீட்டிற்கு பாக்கியா செல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியல் ஒரு குடும்பப்பெண் எப்படியான பிரச்சனைகளை கடந்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. இன்று காலையில் பாக்கியா வீட்டின் முன்பு கோலம் போட வரும் போது தனது மகன் எழில் வாசலில் படுத்திருப்பது பார்த்து குழப்பம் அடைகிறார்.
மகனை எழுப்பி கேட்கும் போது எழில் தனது தந்தை அறிவுரைகளை மட்டுமே செய்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார். இதனை அடுத்து தனது தாத்தா மற்றும் பாட்டியிடம் அவரது மகனை பற்றி சொல்லி கலாய்க்கிறார். அவர்கள் சென்றதும் பாக்கியா எழிலிடம் தனது அம்மாவை பற்றி கூறி வருத்தமடைகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதற்கு எழில் அத்தைக்கு கல்யாணம் செய்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறிவிட்டு பாட்டியை நம் வீட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்றும் கூறுகிறார். இதற்கு பாக்கியா எழிலை திட்டி விட்டு உள்ளே சென்று படுக்குமாறு கூறி விடுகிறார்.
இதனை அடுத்து பாக்கியாவிற்கு அவரது அம்மா போன் செய்து தனது மருமகள் தனது பேத்தியுடன் தன்னை வெளியே தவிக்க விட்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக கூறி அழுகிறார். இதனால் பாக்கியா மிகுந்த கவலை அடைகிறார். தான் அவரை பார்க்க வருவதாகவும் பாக்கியா கூறுகிறார்.
அம்மாவை சமாதானப்படுத்தும் பாக்கியா:
இதனால் வீட்டை தனது மருமகளான ஜெனியிடம் ஒப்படைத்து விட்டு, செய்ய வேண்டிய காரியங்களை பற்றி கூறுகிறார். அவர் சொல்லும் வேலைகளை கேட்டு ஜெனி பதட்டமடைகிறார். அதே போல் தான் இவ்வளவு வேலைகளை செய்ய வேண்டுமா? என்றும் வினவுகிறார்.
பின், பாக்கியா தனது அம்மாவிடம் சென்று நடந்ததை பற்றி கேட்டறிகிறார். அவரது அம்மா அவரது மருமகளை கறிச்சு கொட்டிக்கொண்டு இருக்கிறார்.
சூத்திரர்களை ஜாதி பெயர் வைத்து அழைத்தால் அவமதிப்பா?? சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்பி!!
அவள் இப்படி செய்ததால் நான் இப்படி செய்தேன் என்று புலம்புகிறார். இனி தான் என்ன செய்ய என்றும் சொல்கிறார். முதலில் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கும் பாக்கியா, பிறகு தனது வீட்டிற்கு வரும்படி அவரது அம்மாவை அழைக்கிறார். அதற்கு அவரது அம்மா திட்டவட்டமாக மறுக்கிறார்.
தனது கணவனுக்கு போன் செய்யும் போது அவர் பேசவிடாமல் போனை கட் செய்து விடுகிறார். தனது அம்மாவிடம் சமாளித்து அவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு வற்புறுத்துகிறார். இதோடு இன்றைய எபிசொட் முடிகிறது.