பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்- பாக்கியாவின் நிலையை பார்த்து கோவத்தில் கொந்தளிக்கும் எழில்!!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியல். இதன் சீரியலில் வேலை நிமித்தமாக ஊருக்கு  சென்ற எழில் திரும்பி வீட்டுக்கு வருகிறார். சந்தோஷமாக வரும் எழில் அவரின் அம்மாவின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்

எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு மிகுந்த வேதனையுடன் இருக்கிறார் பாக்கியா. அவரின் வேதனையை குடும்பத்தினர் அலட்சியம் செய்கின்றனர். இதனால் தனது வலியை பொருட்படுத்தாது அனைத்து வேலைகளையும் செய்கிறார் பாக்கியா. இந்நிலையில் தற்போதைய நிலவரமாக கால் வலியுடன் அனைவருக்கும் சமையல் செய்து பரிமாறுகிறார் பாக்கியா.

 

இனியா, மாமனார், மாமியார் உள்ளிட்ட அனைவரும் வந்து உணவு உண்ண அமர்கின்றனர். அந்த வேளையில் கோபியும் வருகிறார். அப்போது கால் வலியால் தெரியாமல் கோபியின் மீது சாய்கிறார் பாக்கியா. இதனால் அவரின் கால் கட்டை பார்க்கும் கோபி எதுவும் சொல்லாமல் பாக்கியாவை பார்த்தபடி உணவு சாப்பிட ஆரம்பிக்கிறார்.

இதனிடையே இனியா பாக்கியாவை நோக்கி கால் சரியாகி விட்டது போல என கேட்க அதற்கு கோபி காலில் கட்டு போட்டால், வலி ஏதும் இருக்காது நினைத்த வேலையை செய்யலாம் என கூறுகிறார். இதனால் மிகுந்த வேதனை அடைக்கிறார் பாக்கியா. இதையடுத்து எழில் வீட்டிற்கு திரும்புகிறார். தனது பாட்டியிடம் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பற்றி விசாரிக்கிறார். அந்த பின்னர் ஜெனியிடம் அம்மா எங்கே என கேக்கும் போது கண்களில் கண்ணீருடன் பாக்கியா காலில் கட்டுடன் நொண்டி நொண்டி நடந்து வருகிறார்.

இதை  பார்த்து அதிர்ந்த எழில் உடனே ஓடி போய் அவரை தாங்கி பிடித்து நடந்ததை விசாரிக்கிறார். அதற்கு அவரின் பாட்டி, பாக்கியா கீழே விழுந்ததை நக்கலாக கூறுகிறார். அந்த பின்னர் அவரை அழைத்து சென்று சோபாவில் உட்கார வைக்கிறார் எழில்.

மிகுந்த வருத்தத்துடன் பாக்கியாவின் காலை பிடித்து கொண்டு நடந்ததை கூறுமாறு கேட்க, அப்பொழுது ஜெனி, பைக்கில் சென்றபோது கீழே விழுந்து விட்டதாக கூற அதிர்ச்சியான எழில், ஏன் இதனை என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார்.மேலும் டாக்டர் கிட்ட போனதை பற்றியும் விசாரிக்கிறார்.

அதன் பிறகு பாக்கியாவை தூக்கி கொண்டு அவரின் அறைக்கு செல்கிறார் எழில். மேலும் பாக்கியாவிடம் இனி எந்த வேலையும் செய்யக்கூடாது, முழுவதும் ஓய்வு எடுக்க சொல்கிறார் எழில். வீட்டிற்கு எழில் வந்த பிறகு தான் பாக்கியா நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இப்படி இன்றைய எபிசொட் நிறைவு பெறுகிறது.

   ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here