வீட்டில் எதற்கெடுத்தாலும் பிரச்சனை ஏற்படுகிறதா?? பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், நிம்மதியின்மை போன்றவைக்கு முக்கிய காரணம் சில பொருட்களை நாம் கடனாக வாங்குவதால் தானாம். இதனால் தான் வீட்டில் தரித்திரியம் ஏற்படுகிறதாம். வாங்க எந்த பொருட்களை கடனாக வாங்க கூடாது என பார்க்கலாம்.
கடனாக வாங்க கூடாத பொருட்கள்
நாம் அவசரத்திற்கு ஒருவரிடம் கடனாக எதாவது ஒரு பொருளை வாங்கி விடுகிறோம். இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் அறிவதில்லை. இதனை அசால்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது தான் இது பெரிய பிரச்சனை ஆகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
- முதலாவதாக நாம் ஒருவரிடம் ‘கர்ச்சீஃப்’ வாங்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அவசரத்திற்கு கை துடைக்க யோசிக்காமல் வாங்கி விடுகிறோம். இதனால் வீட்டில் தரித்திரியம் ஏற்படுமாம். இது ஆரோக்கிய ரீதியாகவும் கேடுகளை விளைவிக்கும்.
- பெரும்பாலானோர் கைக்கடிகாரத்தை பரிசாகவோ அல்லது கடனாகவோ அளிக்கிறோம். இது அனைவரின் வழக்கமும் கூட. ஆனால் கடிகாரத்தை ஒரு நாளும் கடனாக வாங்க கூடாது. இதனால் வீட்டில் வறுமை தள்ளாடும்.
- முக்கியமாக ஒருவரிடம் இருந்து நாம் கடனாக வாங்கும் பேனாவால் வீட்டில் வறுமையே ஏற்படுமாம். ஒருவரிடம் நாம் பேனாவை வாங்கும்போது அதனை திருப்பி கொடுப்பதில்லை. இதனாலேயே உங்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும்.
- மேலும் நாம் அதிகமாக மற்றவர்களிடம் இருந்து பணத்தை தான் கடனாக பெறுகிறோம். இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். கடன் வாங்குவது எளிது. ஆனால் அதனை வட்டியுடன் திரும்ப செலுத்துவதில் தான் சிக்கலே. இதனால் வீட்டில் நிம்மதி இருக்காது.
- ஒருவர் போட்ட உடைகளை மற்றொருவர் போடா கூடாது. சகோதரராக இருந்தாலும் இது வீட்டில் செல்வ செழிப்பை குறைக்குமாம். மேலும் வீட்டில் நமது படுக்கையறையை மற்றவர்களுடன் பகிர கூடாதாம். இதனாலும் வீட்டில் தரித்திரியம் தாண்டவம் ஆடுமாம்.