செழியனின் கல்யாணத்திற்கு வர மறுக்கும் ஈஸ்வரி – பதட்டத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியலில் செழியனுக்கு திருமணம் நடந்ததை அடுத்து கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் நடக்க பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரி செழியனை அவர்களுடன் அனுப்ப மறுக்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கிய லட்சுமி சீரியலில் நேற்றைய எபிசோடில் செழியன் அவரது மாமனார் வீட்டிற்கு சென்று வருவதற்குள் ஈஸ்வரி பல ரகலைகளை செய்தார். மேலும் செழியனை வேறு வந்தவுடனேயே தனியாக அழைத்து செல்கிறார். இதனால் ஜெனியின் அப்பாவிற்கு என்னவோ போல உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் கிச்சனில் சமைத்துக்கொண்டு இருக்கும் ஈஸ்வரியிடம் ஜெனியின் அப்பா அம்மா வரப்போவதை பற்றி கூற ஈஸ்வரி கோவமடைகிறார். செழியனை ஒளிந்துகொள்ள சொல்கிறார். இதனால் செழியனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

பாக்கியா எப்படியோ சமாளித்து வைக்க அப்பொழுது ஜெனியின் பெற்றோர்கள் வருகின்றனர். செழியனை உள்ளேயே விட்டு விட்டு வரும் ஈஸ்வரி அவர்களிடம் செழியன் தூங்குவதாக சொல்கிறார். அப்பொழுது செழியனும் வந்து விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியும் அடைகின்றனர்.

மேலும் சர்ச்சில் கல்யாணத்திற்கு முன்பாக ஒரு கிளாஸ் உள்ளதாகவும் அதில் செழியன் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் அதை எதையும் ஈஸ்வரி கேட்பதாக இல்லை. அவர்கள் எவ்வளவோ சொல்லி புரியவைக்கின்றனர். ஆனாலும் ஒருமனதாகஅனுப்பிவைக்கின்றனர்.

காலை விடிந்ததும் செழியன் கல்யாணத்திற்கு ரெடி ஆகி கிளம்பி வர அனைவரும் தயாராக இருக்கின்றனர். ஆனால் செழியனின் பாட்டி ஈஸ்வரி இன்னும் வரவில்லை என்று தேட அவர் வர மறுக்கிறார். இது தனக்கு பிடிக்கவில்லை என்றும் வர முடியாது என்றும் கூற கடைசியாக சம்மதிக்கிறார் ஈஸ்வரி.

அனைவரும் சர்ச்சிற்கு கிளம்ப அங்கு ஜெனியின் பெற்றோர்கள் அன்போடு அழைக்கின்றனர். அனைவரிடமும் செழியனை அறிமுகப்படுத்துகிறேன். கல்யாண கோலத்தில் ஜெனி கிளம்பி வர அதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here